INTERNATIONAL KALLAR PERAVAI

சர்வதேச கள்ளர் பேரவை உங்களை பாசமுடன் வரவேற்கிறது

Picture
வேறுக்கு நீர்வார்க்கும் சொந்தங்களே வணக்கம்.
சர்வதேச கள்ளர் பேரவையின் இணையத்தளத்திற்கு ஆர்வமுடன் வருகை தந்திருக்கும் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

தொல்பெரும் குடியில் தோன்றி, நல்லற் நெறி நின்று நாடாண்டு, வளம் பெருக்கி, வள்ளல் பெருந்தகையாய் வாழ்ந்து வளமார் புகழ் பெற்று விளங்கிய கள்ளர் குலம் பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்சியடைகிறோம்.

இத்தளத்தில் நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் செய்திகள் நிறையவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு இடம் பெறாத, இடம் பெற வேண்டிய செய்திகளும் உங்களிடமும் இருக்குமேயானால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் ஸ்பென்சர்வெல் மனிதனின் பயனம் என்ற ஆய்வின் முடிவுகள் தரும் தகவலின் படி கள்ளரினத்தில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரலாற்று தொடாபு உண்டு என்றும், வேறு எந்த சமூகத்திற்கும் இவ்வித குடும்ப வரலாற்று தொடர்புகள் இல்லை என்றும், நாகரீக இனங்களில் 65000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் இனம் கள்ளர் இனமென்றும், இன்று உலகலவில் பல்வேறு நாட்டு மானிடவியல் அறிஞர்களும் ஆய்வு செய்யும் இனமும் கள்ளர் இனம் என்றும் கூறுகிறார்.

எந்த ஒரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாடுகளையும் அறிந்து உரையாடி உறவு கொண்டுள்ளதோ அது தான் ஜீவனுள்ள உயிருள்ள இனமாகும். இல்லை எனில் அடையாலமற்ற மாண்ட இனமாகிவிடும்.

கள்ளர் குல இளைஞர்களே கண்மூடித்தனமெல்லாம் மண்மூடிபோக விழித்தெழுங்கள். உங்கள் இனம் காக்க நீங்கள் முன்னேற்றமடைய இன்றைய கள்ளர் தான் அன்றைய மன்னர்கள் என்று உணருங்கள்.

உங்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சொந்தம் ?

உங்களுக்கும் இந்த மண்னின் பண்பாட்டிற்கும் என்ன உறவு ?

உங்களுக்கும் இந்த மாபெரும் சோழமண்டலத்திற்கும் என்ன சம்பந்தம் ?

விடை கண்டு உயர்வு அடையுங்கள்.
ஜெயராம் கண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
இங்கிலாந்து.



Tuesday, October 27, 2009

Letter From The Founder In Tamil


தலைவர் கடிதம்
விளக்கமும் வேண்டுகோளும்


வணக்கம் தமிழக சொந்தங்ளே
கள்ளர் என்ற ஓர் இனமுண்டு. களங்கமற்ற இனமென்ற பெயரும் உண்டு. கங்கை முதல் கடாரம் வரை அறியணை ஏறிய முகவரியும் உண்டு. கடல் கடந்து மும்முடி தரித்த முதல்வன் என்ற வரலாரும் உண்டு. கல்லணை கட்டியும் மைந்தன் மேல் தேரோட்டி நீதியை வணங்கியும் புவியில் பெருங்கோயில் அமைத்து, ஔவையின் வரப்புயர பா மாலையும் ரசித்து இரு ஆயிரம் பட்டங்களையும் சுமந்து பல்லாயிரம் பிறைகளைக் கண்ட வம்சமிது. காலச்சுவடுகள் எமக்களித்த அழியாப் புகழ் கண்டு வீரமுடன் செங்குருதி சிந்திய இனமிது. கள்ளர் பெருமை கொள்வொம். களம் காண்போம். கள்ளர் இனமே ஒன்று கூடுங்கள்; இனிமையுடன் புதியதோர் வரலாறு படைத்திடுவொம். வாருங்கள்!
ஆண்ட பரம்பரை அடிமைப் படலாமா?
வந்த பாதையை நாம் மறந்து விட்டால்
போகும் பாதை நமக்கு புரியாமல் போய்விடும்.

நமது கள்ளர் பேரவை குறித்து சில விளக்கங்களை நம்மோடு செயல்பட காத்திருக்கும் சொந்தகளுக்கு விளக்க கடமைப் பட்டுள்ளோம். கள்ளர் பேரவை எந்த ஓர் அரசியல் கட்சியையும் சாரமல் நமது மக்களுக்காக அவர்களின் முன்னெற்றத்திற்காக செயல்படும் ஒரு சமுதாய அமைப்பு. கடல் கடந்து உலகெங்கும் வாழும் எம்மக்களை இனைக்கும் ஒரு பேரியக்கம். இயக்கத்தின் பெயரும் கொள்கைகளும் நமது வளர்ச்சிக்கான பாதை.

இதை அடைவதற்குரிய வழிகள் பற்றி உங்கள் ஆலொசனைகளை வழங்கும்படி அன்புடன் வேண்டுகின்றோம். தமிழகத்தின் ஏழரைக் கோடி மக்கள் தொகையில் கள்ளர் கிட்டத்தட்ட இரு கோடி மக்களைக் கொண்டிருந்தாலும் நம் மக்களூக்கு கிடைக்கவேண்டிய அனைத்து உரிமைகளும் மறைக்கப்பட்டு மறுக்கப்பட்டு வருவது ஒரு வேதனையான உண்மை.

சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதி கூற்றை மறுப்பதற்கில்லை. மனித சமுதாயம் அனைத்தும் ஒரே சாதி என்ற நிலை என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றதோ, அன்று அதை நாமும் எற்றுக்கொள்வோம்

நாம் ஒரு சாதி ரீதியான அமைப்பில் ஈடுபட்டால் சமுதாயதில் உள்ள மற்ற இன மக்கள் நம்மை தவறாக அல்லது விரோதமாக நினைப்பார்களோ என்று சிலர் எண்ணுகிறார்கள். இது ஒரு தவறான கருத்து. நம் சமுதாயத்திற்கு பணியாற்றிடக் கிடைத்திடும் நல் வாய்ப்பாக இதைக் கருதிட வேண்டும்.

இன்று நம் நிலை என்ன? கல்வி வாய்ப்புகள் கிடைப்பதில் இருந்து வேலை வாய்ப்புகள் பெரும் வரை அனைத்தும் மறுக்கபடுகிறது.

ஏன் இந்த அவல நிலை?
நமது அறியாமையா?
அலட்சிய மனப்போக்கா?
அல்லது நமது சமுதாய ஒற்றுமை இன்மையா?

ஒன்றை யோசித்துப் பாருங்கள். ஒரு சமுதாயத்தில் தனி மனிதனின் வளர்ச்சிஅந்த சமுதாயத்தின் வளர்ச்சி என்று கூற முடியாது. ஆனால் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி அந்த சமுதாயத்தை சேர்ந்த அனைத்து மக்களூக்கும் ஏதாவது ஒரு வளர்ச்சியை நிச்சயம் தரும். இந்த ஒரு லட்சிய நோக்கை பெரிதாகக்கொண்டு நாம் செயல் பட வேண்டும். இன்று நாம் மௌனமாக இருந்தால் நளை நமது தலைமுறைகள் அடிமைகளாக கூனிக்குறுகி நிற்க நேரிடும். பல தலைமுறைகளாக நம் முன்ணோர்கள் செய்து வந்த தவறுகளை நாமும் செய்ய வேண்டாம். நமது சமுதாய வளர்ச்சிக்கான, ஒற்றுமைக்கான முயற்சிகளை எடுப்போம். கை கோர்த்து நடப்போம். வெற்றி காண்போம்.

தீர்வு காணத் தெரியாதவர்கள் தீர்ப்பு கோரி புலம்பாதீர்கள்.
தீர்வு காணும் முயற்சிகளின் எண்ணிக்கயை அதிகமாக்குங்கள்.
முயற்சிகளின் ஆற்றலுக்கு எல்லை இல்லை.
முயற்சி தான் தன்மானத்தின் உச்ச நிலை என்பதனை நீங்கள் உணரும்போது தீர்வு தானாக உங்களை நாடி வரும்.
இல்லை எனில், அநியாயமாக ஒருவரை நீதிபதி ஆக்கிவிட்ட அவமானம் உங்களைக் குடையும்.

நமது கள்ளர் பேரவை செயல் திட்டங்கள் யாவும் மிக கவனமுடன் செயல் பட வேண்டும். பத்தோடு பதினொன்றாக இதுவும் அமைந்துவிடக் கூடாது. நமது செயல் பாடுகள் தான் நமது அங்கீகாரம். நாம் சிறப்பாக செயல்பட அதிக உறுப்பினர்கள் வேண்டும், நமது செயல் பாட்டின் அடிப்படை தான் நமது உறுப்பினர் பெருக்கத்திற்கு வழி. நமது சொந்தங்களிடம் இதனை விளக்கமாக எடுத்துரைத்து அதிக உறுப்பினர்களை பெற்றுத்தாருங்கள். நாளடைவில் நம் செயல்பாடுகள் நமக்கு உறுப்பினர்களை தானே பெற்றுத்தரும்.

கள்ளர் பேரவை நமக்கு நாமே என்ற அடிப்படையில் நம் இனத்தின் உயர்வுக்காகவும் வளர்ச்சிக்காகவும் உருவாக்கப்பட்ட பேரவை என்பதை உணரவேண்டும்.

நம் மக்களை ஒன்று திரட்டுவது மிகவும் சுலபம் (அரசியல்)
ஒன்று பட வைப்பது தான் மிகவும் கடினம் (சமுதாய வளர்ச்சி)
தோள்முறிந்து போனாலும் போகட்டும். நமது வாள் முறிந்து போகாமல் பார்த்துக்கொள்வோம்.
நன்றி.
என்றும் அன்புடன்.
ஜெயராம் கண்டியர் கிருபாகரன்.
தலைவர் சர்வதேச கள்ளர் பேரவை

No comments:

Post a Comment