INTERNATIONAL KALLAR PERAVAI

சர்வதேச கள்ளர் பேரவை உங்களை பாசமுடன் வரவேற்கிறது

Picture
வேறுக்கு நீர்வார்க்கும் சொந்தங்களே வணக்கம்.
சர்வதேச கள்ளர் பேரவையின் இணையத்தளத்திற்கு ஆர்வமுடன் வருகை தந்திருக்கும் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

தொல்பெரும் குடியில் தோன்றி, நல்லற் நெறி நின்று நாடாண்டு, வளம் பெருக்கி, வள்ளல் பெருந்தகையாய் வாழ்ந்து வளமார் புகழ் பெற்று விளங்கிய கள்ளர் குலம் பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்சியடைகிறோம்.

இத்தளத்தில் நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் செய்திகள் நிறையவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு இடம் பெறாத, இடம் பெற வேண்டிய செய்திகளும் உங்களிடமும் இருக்குமேயானால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் ஸ்பென்சர்வெல் மனிதனின் பயனம் என்ற ஆய்வின் முடிவுகள் தரும் தகவலின் படி கள்ளரினத்தில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரலாற்று தொடாபு உண்டு என்றும், வேறு எந்த சமூகத்திற்கும் இவ்வித குடும்ப வரலாற்று தொடர்புகள் இல்லை என்றும், நாகரீக இனங்களில் 65000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் இனம் கள்ளர் இனமென்றும், இன்று உலகலவில் பல்வேறு நாட்டு மானிடவியல் அறிஞர்களும் ஆய்வு செய்யும் இனமும் கள்ளர் இனம் என்றும் கூறுகிறார்.

எந்த ஒரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாடுகளையும் அறிந்து உரையாடி உறவு கொண்டுள்ளதோ அது தான் ஜீவனுள்ள உயிருள்ள இனமாகும். இல்லை எனில் அடையாலமற்ற மாண்ட இனமாகிவிடும்.

கள்ளர் குல இளைஞர்களே கண்மூடித்தனமெல்லாம் மண்மூடிபோக விழித்தெழுங்கள். உங்கள் இனம் காக்க நீங்கள் முன்னேற்றமடைய இன்றைய கள்ளர் தான் அன்றைய மன்னர்கள் என்று உணருங்கள்.

உங்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சொந்தம் ?

உங்களுக்கும் இந்த மண்னின் பண்பாட்டிற்கும் என்ன உறவு ?

உங்களுக்கும் இந்த மாபெரும் சோழமண்டலத்திற்கும் என்ன சம்பந்தம் ?

விடை கண்டு உயர்வு அடையுங்கள்.
ஜெயராம் கண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
இங்கிலாந்து.



Saturday, October 31, 2009

The Greatest Creations of Raja Raja Cholan on Earth and His Kindom Stretching up to Far East.


Some interesting facts well known (may be) to everybody:
This tepmle is considered to be one of the Architectural wonders of the world.
Built by Rajaraja Chozhan - The Great was built some 1000 years ago around 1002 A.D.
It is believed that its the Britishers who first framed administrative rules but it is Rajaraja Chozhan who framed them first. The proof can be found on the writings / inscriptions all over the temple. The writings also give us the information about all the people who were involved in constructing this huge monument.
The 'Vimana' - or the temple tower - is 216 ft (66 m) high.
The Kalash or 'Shikhara' (bulbous structure on the top) of the temple is itself very large and heavy (81.25 tons).
There is a big statue of Nandi (sacred bull), carved out of a single rock, at the entrance measuring about 16 feet long and 13 feet high

Photograph 1. By Jeyaram on 24th September 2009


The Tanjore Temple differs from many other big temples in Tamilnadu. The other temples do not have such beautiful and large open spaces.The inner court is about 500 feet long and 250 feet broad. The court is surrounded on all sides by a cloister.

Photograph 2. By Jeyaram Taken on 24th September 2009


The Brihadishwara Temple also known as Big temple at Thanjavur is the world's first complete granite temple and a brilliant example of the major heights achieved by Cholas in temple architecture. It was built by RajaRaja Chola I and remains as one of the greatest glories of Indian architecture.

Photograph 3. By Jeyaram Taken on 24th September 2009





Photograph 4. By Jeyaram Taken on the 24th September 2009



Thanjavur brihadeesvara Temple/Big Temple - the world's first granite temple. And one of the largest temples in India if not the largest. Built by Raja raja Cholan - the most noble of the ancient Tamil Dynasty called Cholas.
RajaRaja ruled the south of india from 985 AD to 1014 AD, uniting three different kingdoms under him. He was the first Sailor king of India, and influenced much of the culture of Indonesia, Thailand and Singapore - Angkor Vat in Cambodia is built in the Dravidian style of temple building and was a result of Chola influence in these areas.

This temple, besides being the first granite structure, is unique in the the shadow of the vimana or the pagoda never falls on the ground.

Photograph 5. By Jeyaram Taken on the 24th September 2009




Photograph 6. By Jeyaram Taken on the 24th September 2009




The temple tower or ‘Gopuram’ is built in fourteen storeys and said to be 216 ft high. It is among the tallest of its kind in India, complete with images of gods of the Hindu pantheon sculpted onto it. The large bulbous/dome shaped structure right at the top of the gopuram is also said to be a monolith and estimated to weigh 80 tons. It is believed that in order to get this structure to the top of the tower, an inclined plane was built starting four miles north-east of the city!!

Photograph 7. By Jeyaram Taken on the 24th September 2009





Photograph 8. By Jeyaram Taken on the 24th September 2009



Photograph 9. By Jeyaram Taken on the 24th September 2009






Kallanai By Karikal Cholan
Photographed on 24th September 2009

By Jeyaram

 
 
 
Kallanai By Karikal Cholan  Another View. Photographed on 24th September 2009
By Jeyaram
 
 
 
 
 
 
 
Statue of Manu Neethee Cholan at Madras High Court
Photographed By Jeyaram

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Satue of Karikal Cholan at kallanai
Photographed By Jeyaram

 

Jeyaram Kandiyar Kiruphakaran


Wednesday, October 28, 2009

The Living Legends Among Kallars. 5


பேராசிரியர் பி.விருத்தாசலம் நாட்டார்.
நிறுவனரும் முதல்வரும் நாவலர் ந.மு.வே. நட்டார் திருவருள் கல்லூரி.
கபிலர் நகர். வெண்ணாற்றங்கரை.
தஞ்சாவூர் - 613 003.
தன் வரலாற்றுக் குறிப்புகள்.
தென்காவேரி என்பது என்னை ஈன்று புறந்தந்த தாயின் பெயர். பொ.பிச்சையா நாட்டார் என்னைச் சான்றோன் ஆக்கிய என் தந்தையின் பெயர். என் பிறந்தநாள் 22-05-1940. ஆனாலும் நான் நான்கு வயதுச் சிறுவனாக இருந்த போது என் அண்ணன் பள்ளிக்கூடம் போவதைப் பார்த்து நானும் பள்ளிக்கூடம் போவேன் என்று அடம்பிடித்து, நடுத்தெருவில், புழுதிமண்ணில் கிடந்து புரண்டு அழுது,ஆர்ப்பாட்டம் செய்த என் தொல்லை பொறுக்கமாட்டாமல், என் தாய் எனக்கு போட்டுவிடக் கால்சட்டையோ மேல் சட்டையோ இல்லாத நிலையில், என் தந்தையின் துண்டு ஒன்றை இடுப்பில் சுற்றிவிட்டு என்னைப் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார். எப்படியோ காலம் விரைந்து பறந்தோடி விட்டது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள என் பிறந்த ஊரான மேலத்திருப்பூந்துருத்தியில் எட்டாம் வகுப்புவரைபடித்துத் தேர்ச்சிபெற்றேன். திருவையாறு சீனிவாசராவ் மேனிலைப்பள்ளி, பூண்டி திரு புட்பம் கல்லூரி, திருவையாறு அரசர் கல்லூரி முதலிய கல்விநிறுவனங்களில் தொடர்ந்து படித்தேன். தமிழில் வித்துவான் பட்டம் பெற்றேன். சென்னையில் தமிழாசிரியராக பணிபுரிந்துகொண்டே தனியாகப்படித்து பி.ஏ. பட்டம் பெற்றேன். கரந்தைப் புலவர் கல்லுரியில்
25-06-1969 இல் பணியில் சேர்ந்து பணிபுரிந்து கொண்டே தனியாகப் படித்துத் தேர்வெழுதி எம்.ஏ பட்டம் பெற்றேன்.
இது படித்துப் பட்டம் பெற்ற வரலாறு.
என் ஊனிலும் உயிரிலும் கலந்து என்னை இயக்கி வரும் இலக்கிய வரிகள்
1. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
2. பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
3. பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக
4. எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று
அறியேன் பராபரமே
5. அறிவை விரிவு செய்; அகண்டம் ஆக்கு. விசாலப் பார்வையால் விழுங்கு
மக்களை.
இனியும் என் தொண்டுகள் தொடரும்.
நாடுவாழ நான் வாழ்வேன்.
நன்றி,
வணக்கம்.
பேராசிரியர் பி.விருத்தாசலம் எழுதிய நூல்கள்
1. சான்றோர் சிந்தனைகள்.
2. காவிரிக்கரை வேங்கடம்.
3. தமிழ்வேள் உமாமகேசுவரனாரும் நாவலர் நாட்டாரையாவும்.
4. கண்ணகி சிலம்பீந்த காரணம்.
5. மரூஉ மொழிகளும் வழூஉ மொழிகளும்.
6. என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்.
7. சிந்தனைச் சுடர்.

The Living Legends Among Kallars. 4


முனைவர் அ.தட்சிணாமூர்த்தி நெடுவாண்டார்.
மணை எண் 205/418. புஸ்பம் காலனி 2வது தெரு. அருளானந்தம் நகர்.
10வது குறுக்குத் தெரு.
தஞ்சாவூர் 7.
தொலை பேசி 0091 4362 277402
கை பேசி 0091 9442399025
சொந்த ஊர்- நெடுவாக்கோட்டை.
பிறந்த தேதி 10 - 04 - 1938
தந்தை - அய்யாச்சாமி நெடுவாண்டார்.
தாய் - ராசம்மாள் வாண்டையார்.
மனைவி பெயர் - ஜெயக்குமாரி வாண்டையார்.
மகள் பெயர் - இரநிலா பி. இ.
மருமகன் - அருண்குமார்.
பணி நியமணங்கள்
1. முதல் நிலை தமிழ் ஆசிரியர் 1962 - 1965 வடபாதி மங்கலம் சோமசுந்தரம்
உயர் நிலைப்பள்ளி. திருவாரூர்.
2. முதல் நிலை தமிழ் ஆசிரியர் 1965 - 1967 அன்பநாதபுரம் அறத்துறை கல்லூரி.
மயிலாடுதுறை
3. விரிவுரையாளர் 1967 - 1991. அ. வீரையா வாண்டையார் நிணைவு ஸ்ரீ புஸ்பம்
கல்லூரி (தன்னாட்சி) பூண்டி.
4. முதல்வர் 1991 - 1996 செந்தமிழ்க் கல்லூரி. மதுரை.
படைப்புகள்.
01. சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள்.
02. தமிழியற் சிந்தனைகள்.
03. ஐங்குறுநூறு - உரை.
04. காதலா கடமையா.
05. இருண்ட வீடுகள்.
06. கடல் மேல் குமிழிகள்.
07. தமிழச்சியின் கத்தி.
08. நீதி வெண்பா.
09. தமிழர் நாகரிகமும் பண்பாடும்.
10. பாரதிதாசன் கவிதைகள்.
விருதுகள்.
தமிழக அரசின் 2003 ஆம் ஆண்டு பாரதிதாசன் விருது.
தொண்டுகள்
01. பத்துப்பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு பதிப்பாசிரியர்.
02. நாலடியார் ஆய்வு பதிப்பு. பொறுப்பாசிரியர். செந்தமிழ் உயராய்வு மையம்

The Living Legends Among Kallars. 3


Thiyagaraja Thevar Somasundaram
நமது பழம் பெருமையை சரித்திர சான்றுகளுடன் இளைய தாலைமுறையினருக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்ற நோக்குடன் தமிழ்நாடு கள்ளர் பேரவையின் அதிகார பூர்வ ஏடான கள்ளர் இனமுழக்கம் என்ற செய்தி மலரை கடந்த 12 வருடங்களாக வெளியிட்டு ஒரு விழிப்புனர்ச்சியை ஏற்படுத்திவரும் உயர் திரு சோமசுந்தர தேவருக்கு எமது வணக்கங்கள்.தஞ்சை தரணியை ஆண்ட பார்புகழ் சோழர்களின் வழித்தோன்றல்களே கள்ளரினம் என்பது வரலாறு. தமிழர்களின் மூத்த குடியினராய், முதற்குடியினராய் புகழ் மணக்க வாழ்ந்த இனம் கள்ளரினம். ஒற்றுமையின்மை காரணமாக பழம் பெருமைகளை இழந்து மூன்றாந்தர குடியினராக வாழ்கின்ற இன்றைய அவலம் நீங்கிட கள்ளரினத்திற்கு புத்துணர்ச்சியை, வீரத்தை ஊட்டும் வகையிலும், சமுதாய எழுச்சிக்கும், ஏற்றதிற்கும், கல்வி, தொழில் பொருளாதார மேம்பாட்டிற்கும் சிறப்பான சேவையாற்றிவரும் சொல்லின் செல்வர் நாகூர் சோமசுந்தர தேவரின் வழிகாட்டுதலுடன் எம் இளைய தலைமுறை புதியதொரு வரலாறு படைப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
சொல்லின் செல்வர் நாகூர் சோமசுந்தர தேவரின் வாழ்க்கை குறிப்புகள்.
Date of Birth: 22nd July 1932.
Qualifications: B.A.
Nativity: Nagoor.
Profession: Retired Deputy Registrar of Cooperative Society.
Wife: Mrs. Ramadevi Thevar.
Date of Birth: 12th March 1942.
Family: Blessed with Two Sons and Two Daughters.
Mobile: 0091 9790379108.
Residence: 3/784, karthick Nagar. Pillaiyar Patty. Thanjavur.

Living Legends Among Kallars. 2


கவிஞர் கோ. வேணுகோபாலன்.
680. 19ஆவது தெரு. பி.வி. காலனி. சென்னை 600 039.
கைபேசி 0091 9840749965.
தரைவழிப்பேசி 0091 44 25520866.
பர்மிய நாட்டில் கோவிந்தசாமி மாதுரார் - திருமதி சாலாட்சி தம்பதிகளின் மகனாக பிறந்தவர் வேணுகோபாலன். பல்வேறு இலக்கிய நயம் செறிந்த நூல்களை படைத்தவர். சொந்தஊர் ஒரத்தநாடு மாவட்டதின் தென்னமநாடு கிராமம். கடல் கடந்து ஆண்டுகள் பல வாழ்ந்து, அவ்வாறு வாழ்ந்த பர்மிய மண்ணிலும் தமிழ்ப்பணியில் தளராது உழைத்து தாய்த் தமிழகத்தில் குடியிருக்க மீண்ட பின்பும் குன்றாதத் தமிழார்வத்துடன் இயங்கி வரும் கவிஞர் கோ. வேணுகோபாலன் மாதுரார் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி சர்வதேச கள்ளர் பேரவையில் தமிழக சிறப்பு அங்கத்தினரரக அரவனைத்துகொள்வோம்.
கோ. வேணுகோபாலன் மாதுரார் அவர்களின் படைப்புகள்.
1. சோழ மண்டலப் பாடல்கள்.
2. தேன் முகில்.
3. வேலும் தமிழும்.
4. மண்ணின் மைந்தன். ( நாடகம் )
5. நினைத்ததே நடக்கும். ( நாடகம் )
6. நேதாஜி கீதம். ( ஒலிநாடா )

Living Legends Among Kallars. 1


புலமை வேங்கடாசலம் வன்னியர்.
மணை எண் 23/15. பூக்கார 2வது தெரு. தஞ்சாவூர் 1
தொலை பேசி 0091 4362 238554.
கை பேசி 0091 9362852769.
சொந்த ஊர்- புள்ளவராயன் குடிக்காடு. நீடாமங்கலம்.
பிறந்த தேதி 20 - 06 - 1946.
தந்தை - பிச்சை வன்னியர்.
தாய் - சரஸ்வதி அம்மாள் புல்லவராயர்.
மனைவி பெயர் - பார்வதி தேவர்.
மகள் பெயர் - கண்னுக்கினியாழ்.
மருமகன் - ஜெயக்குமார் பாலியார்.
பணி வழக்கறிஞர்.
படைப்புகள்:
01. இந்துத் திருமணச் சட்டம்.
02. சட்டத்தமிழ் அகராதி.
03. சட்டக் கட்டுரைகள் வாழ்வியற் களஞ்சியம்.
04. சீவனாம்ச வழக்கு05. கள்ளர் வரலாறு.
06. கள்ளர் பட்டப்பெயர்கள்.
07. தஞ்சாவூர் அரண்மனை வரலாறு.
08. தஞ்சாவூர் பெரியகோயில் வரலாறு.
09. மறவர் வரலாறு.
10. புலன் விசாரணை.
11. இந்திய முத்திரைச் சட்டம்.
12. சிறப்புத் திருமணச் சட்டம்.
13. உரிமையியல் விசாரணை முறைச்சட்டம்.
14.குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்கு மனுக்கள் தாக்கல் செய்யும்
நடைமுறை.
15. கள்ளரின மன்னன் இராசராசசோழன்.
16. துன்ப கீதம்17. நியாயக் குரல்.
18. இழந்த காதல்.
மற்றும் 38 புத்தகங்கள்.
விருதுகள்:
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின்முதல் பரிசு (சிறப்புத் திருமணச் சட்டம்)

Religious Legends Among Kallars 6


திருமங்கையாழ்வார் கள்ளர் மரபைச் சேர்ந்தவர்.திருமங்கை மன்னரின் இயற்பெயர் நீலன். சோழ மன்னனின் சேனைத் தலைவர் ஆலிநாடான் என்பவர்க்கும் மனைவி வல்லித்திருவுக்கும் நள ஆண்டில் கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் பௌர்ணமி திதியில் வியாழக்கிழமை அன்று திருமங்கை மன்னன் திருமங்கையாழ்வார் என அழைக்கப்பட்ட நீலன் பிறந்தார். நீலன் கல்வி கற்க்கும்போதே இலகணப்பிழையின்றி கருத்துச் செறிவுள்ள பாக்களை இயற்றும் ஆற்றலைப் பெற்றிருந்தார். ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளில் வல்லவராக விளங்கி நாற்கவி வல்லான் என்ற சிறப்பு பெயரையும் பெற்றார்.வாள், வில், வேல், ஈட்டி ஆகிய படைக்கலப் பயிற்சியிலும் வல்லவனானார். தேர், யானை, குதிரை, காலால் ஆகிய நால்வகைப் படைகளையும் தலைமை யேற்று பகைவர்களை வென்று சோழ மன்னருக்கு பெரும் வெற்றிகளை தேடித்தந்தார். சோழ மன்னர் அகமகிழ்ந்து நீலனை திருவாலி நாட்டிற்க்கு மன்னனாக்கி திருமங்கை என்னும் ஊரை தலைநகராக தந்தான்.நீலன் குமுதவல்லியார் என்பவரை மணந்து தன் வாழக்கைப் பயணத்தை தொடங்கினார். தன் கையில் கிடைத்த செல்வத்தை எல்லாம் பாகவதர்கட்கு அமுது படைப்பதிலேயே செலவழித்தார். அரசனுக்கு சேரவேண்டிய வரிப்பணத்தையும் இதற்கே செலவழித்தமமையால் அரசு காவலில் சிறை வைக்கப்பட்டு பின்னர் காஞ்சிப் பேரருளான் வரதராசப்பெருமாள் திருவருளாள் பெரும் பொருள் பெற்று அரசுக்குரிய கப்பத்தை செலுத்தியும் சிறை மீண்டார். திருவரங்கப் பெருமாள் நீலனின் வலது காதில் ஓம் நமோ நாராயணா என்னும் திருமந்திரத்தை உபதேசித்து அவரின் ஞானக்கண்ணைத் திறந்து திருவருள் காட்டினார். இதன் பின் திருமங்கையாழ்வார் 108 திவ்விய தேசங்களில் 86 திவ்விய தேசங்களை மங்களாசாசனம் செய்தார்.திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிரியதிருமடல், பெரியதிருமடல் என்கிற ஆறு பிரபந்தங்களையும் அருளிச் செய்துள்ளார். திருமங்கையாழ்வார் தம் இறுதிக்காலத்தை தம் மணைவியுடன் திருக்குறுங்குடியில் கழித்தார்.

Religious Legends Amoung Kallars 5


கூற்றுவ நாயனார்
களந்தை என்னும் பதியிலே கூற்றுவர் என்னும் குறுநில மன்னர் ஒருவர் இருந்தார். அவர் சிவபெருமானது திருநாமத்தினை நாடோறும் ஓதியும் சிவனடியார் பாதம் பணிந்தும் ஒழுகினார். அவ்வொழுக்கத்தின் வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப் பெற்று மாற்றார்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள்வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப்பெற்று மாற்றார்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள் வல்லாமையால் பல போர்களிலும் பல அரசர்களையும் வென்று அவர்களது வளநாடுகளையெல்லாம் கவர்ந்தார். மணிமுடி ஒன்றொழிய அரசர் திருவெல்லாமுடையாராய் விளங்கினார்.
மணிமுடி சூட்டிக் கொடுக்கும்படி அதனைச் சூட்டும் உரிமையுடைய தில்லைவாழந்தணர்களைக் கேட்டார். அவர் சோழர் குல முதல்வர்களுக்கு அன்றி முடி சூட்டமாட்டோம் என்று மறுத்துத் தம்மில் ஒரு குடியை மணி முடியைக் காவல் செய்யும் படி வைத்து, இவராணைக்கு அஞ்சி சேர நாட்டிற்குச் சென்றுவிட்டனர்.
அது கண்ட கூற்றனார் மனம் தளர்ந்து “முடியாக உமது பாதம் பெற வேண்டும்” என்று ஆடவல்லானைப் பரவி, அந்நினைவுடன் துயின்றார். அன்றிரவு மன்றிலாடும் பெருங்கூத்தர் எழுந்தருளி, தமது திருவடிகளையே முடியாக அவருக்குச் சூட்டியருள, அவற்றைத் தாங்கி அவர் உலகினைத் தனியாட்சி புரிந்தனர். இறைவர் கோயிலெல்லாம் உலகுவாழப்பூசை புரிவித்தனர். இவ்வாறு உம்பர் மகிழ நல் அரசாட்சி புரிந்திருந்து உமையொருபாகர் திருவடி சேர்ந்தனர்.

Religious Legends Among Kallars 4


“வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்” – திருத்தொண்டத்தொகை.
மெய்பொருள் நாயனார் சேதிநாட்டுத் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட குறுநிலமன்னர் குலத்தில் அவதரித்தார். அக்குறுநில மன்னர்குலம் மாதொருபாகனார்க்கு வழிவழியாக அன்பு செய்து வந்த மலையான்மான்குலமாகும். நாயனார் அறநெறிதவறாது அரசு புரிந்துவந்தார். பகையரசர்களால் கேடுவிளையாதபடி குடிகளைக் காத்துவந்தார். ஆலயங்களிலே பூசை விழாக்கள் குறைவற நடைபெறக் கட்டளை விட்டார். ‘சிவனடியார்வேடமே மெய்ப்பொருள் எனச் சிந்தையிற் கொண்ட அவர் சிவனடியார்க்கு வேண்டுபவற்றைக் குறைவறக் கொடுத்து நிறைவு காணும் ஒழுக்கத்தவராக இருந்தார்.
இவ்வாறு ஒழுகிவந்த மெய்பொருள்நாயனாரிடம் பகைமைகொண்ட ஒரு மன்னனும் இருந்தான். அவர் பெயர் முத்தநாதன். அவன் பலமுறை மெய்பொருளாளருடன் போரிட்டுத் தோல்வியுற்று அவமானப்பட்டுப்போனான். வல்லமையால் மெய்பொருளாளரை வெல்லமுடியாதெனக் கருதிய அவன் வஞ்சனையால் வெல்லத்துணிந்தான். கறுத்த மனத்தவனான அவன் மெய்யெல்லாம் திருநீறு பூசி, சடைமுடி தாங்கி, ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும் புத்தகமுடிப்பு ஒன்றைக் கையிலேந்தியவனாய்க் கோவலூர் அரண்மனை வந்தான். வாயிற்காவலர் சிவனடியாரென வணங்கி உள்ளே போகவிட்டனர். பல வாயில்களையும் கடந்த முத்தநாதன் பள்ளியறை வாயிலை அடைந்தான். அவ்வாயிற் காவலனான தத்தன் “தருணமறிந்து செல்லல் வேண்டும் அரசர் பள்ளிகொள்ளும் தருணம்” எனத் தடுத்தான். ‘வஞ்சமனத்தவனான அவன் அரசர்க்கு ஆகமம் உரைத்தற்கென வந்திருப்பதாயும், தன்னைத் தடைசெய்யக்கூடாதெனவும் கூறி உள்ளே நுழைந்தான். அங்கே அரசர் துயின்று கொண்டிருந்தார். அங்கேயிருந்த அரசி அடியாரின் வரவுகண்டதும் மன்னனைத் துயில் எழுப்பினாள். துயிலுணர்ந்த அரசர் எதிர்சென்று அடியாரை வரவேற்று வணங்கி மங்கலவரவு கூறி மகிழ்ந்தார். அடியவர் வேடத்திருந்தவர் எங்குமிலாதோர் சிவாகமம் கொண்டுவந்திருப்பதாகப் புத்தகப்பையைப் காட்டினார். அவ்வாகமப் பொருள் கேட்பதற்கு அரசர் ஆர்வமுற்றார். வஞ்சநெஞ்சினான அவ்வேடத்தான் தனியிடதிலிருந்தே ஆகம உபதேசஞ் செய்யவேண்டும் எனக் கூறினான். மெய்பொருளாளர் துணைவியாரை அந்தப்புரம் செல்லுமாறு ஏவிவிட்டு அடியவருக்கு ஓர் ஆசனமளித்து அமரச் செய்தபின் தாம் தரைமேல் அமர்ந்து ஆகமப்பொருளைக் கேட்பதற்கு ஆயத்தமானார். அத்தீயவன் புத்தகம் அவிழ்ப்பான் போன்று மறைத்து வைத்திருந்த உடைவாளை எடுத்துத் தான் நினைத்த அத் தீச் செயலை செய்துவிட்டான். வாளால் குத்துண்டு வீழும் நிலையிலும் சிவவேடமே மெய்பொருள் என்று தொழுதுவென்றார். முத்தநாதன் நுளைந்த பொழுதிலிருந்து அவதானமாய் இருந்த தத்தன், இக்கொடுரூரச் செயலைக் கண்ணுற்றதும் கணத்திற் பாய்ந்து தன் கைவாளால் தீயவனை வெட்டச் சென்றான். இரத்தம் பெருகச் சோர்ந்துவிழும் நிலையில் இருந்த நாயனார் “தத்தா நமரே காண்” என்று தடுத்து வீழ்ந்தார். விழும் மன்னனைத் தாங்கித் தலைவணங்கி நின்ற தத்தன் ‘அடியேன் இனிச் செய்யவேண்டியது யாது?’ என இரந்தான். “இச்சிவனடியாருக்கு ஓர் இடையூறும் நேராதவாறு பாதுகாப்பாக விட்டுவா” என்று மெய்பொருள் நாயனார் பணித்தார். மெய்பொருளாளரது பணிப்பின் படியே முத்தநாதனை அழைத்துச் சென்றான் தத்தன். செய்தியறிந்த குடிமக்கள் கொலை பாதகனைக் கொன்றோழிக்கத் திரண்டனர். அவர்களுக்கெல்லாம் “அரசரது ஆணை” எனக் கூறித்தடுத்து நகரைக் கடந்து சென்று நாட்டவர் வராத காட்டெல்லையில் அக்கொடுந் தொழிலனை விட்டு வந்தான் தத்தன். வந்ததும் அரசர் பெருமானை வணங்கி “தவவேடம் பூண்டு வந்து வென்றவனை இடையூறின்றி விட்டு வந்தேன்” எனக் கூறினான். அப்பொழுது மெய்பொருள் நாயனார் “இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்யவல்லார்” எனக் கூறி அன்பொழுக நோக்கினார். பின்னர் அரசுரிமைக்கு உடையோரிடமும், அன்பாளரிடமும் “திருநீற்று நெறியைக் காப்பீர்” எனத் திடம்படக் கூறி அம்பலத்தரசின் திருவடி நிழலைச் சிந்தைசெய்தார். அம்பலத்தரசு அம்மையப்பராக மெய்பொருளாளன்பாருக்குக் காட்சியளித்தனர். மெய்பொருளாளார். அருட்கழல் நிழல் சேர்ந்து இடையறாது கைதொழுதிருக்கும் பாக்கியரானார்.

Religious Legends Among Kallars 3


“மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்” – திருத்தொண்டத் திருத்தொகை.
தேடாத வளத்திற் சிறந்த திருமுனைப்பாடி நாடு. இந்நாட்டினை அரசுபுரிந்த முனையராயர் என்னும் குறுநில மன்னர் மரபிலே வந்தவர் நரசிங்கமுனையரையர். அவர் பகைவரை வென்று தீதகலச் செய்தனர்; சிவனடியார்களின் திருவடியடைதலே அரும்பேறென்று அடியாரைப் பண்ந்தார். சிவன்கோயிலின் சிவச் செல்வங்களைப் பெருக்கிக் காத்தலைத் தம் உயிரினும் சிறப்பாகச் செய்தனர். சிவநெறித் திருத்தொண்டுகளைக் கனவிலும் மறவாமல் கடமையாகச் செய்து வந்தார்.
திருவாதிரை நாடோறும் சிவபெருமானுக்கு நியமமாக விசேட பூசை செய்து, அன்று வந்தணையும் அடியார்கள் ஒவ்வொருவருக்கும் நூறு பொன் குறையாமல் கொடுத்துத் திருவமுது அளித்து வழிபட்டு வந்தார். ஒரு திருவாதிரை நாளில் அடியார்களுடனே “மான நிலையழி தன்மை வரும் காமக்குறி மலர்ந்த ஊனநிகழ் மேனியராகிய” ஒருவரும், திருநீறு அணிந்து வந்தனர். அவர் நிலையினைக் கண்டு அருகிலிருந்தவர்கள் இழந்து அருவருத்து ஒதுங்கினர்.
நரசிங்கர் அதுகண்டு அவரை அணுகி வணங்கிப் பேணினார். நல்லொழுக்கம் இல்லாதவர்களாயினும் திருநீறு அணிந்தவர்களை உலகம் இகழ்ந்து நரகிலடையாமல் உய்யவேண்டுமென உளம்கொண்டு அவரைத் தொழுது அவருக்கு இரட்டிப்பொன் (இருநூறு பொன்) கொடுத்து உபசரித்து விடை கொடுத்தருளினார்.
நரசிங்கமுன்னையரையர் ஒரு நாள் வீதிவலம் வரும் பொழுது வீதியில் தேருருட்டி விளையாடும் நம்பியாரூரரைக் கண்டார். அவர் தம் அழகில் பெரிதும் ஈடுபட்ட அரசர் சடையனாரிடம் சென்று அவரிடம் தாம் கொண்ட நட்புரிமையினால் நம்பியை வளர்த்தற்குத் தருமாறு வேண்டினார். சடையனாரும் அவர் வேண்டுதலிற்கு இணங்கி நம்பியை வளர்த்தற்குத் தருமாறு வேண்டினார். சடையனாரும் அவர் வேண்டுதலுக்கு இணங்கி நம்பியை அளித்தார். நம்பியைச் பெருஞ் செல்வமெனக் கொண்ட நரசிங்கமுனையார் அவரை அரச திருவெலாம் பொருந்த திருமணப் பருவம் அடையும்வரை வளர்த்தார். இவ்வாறு அன்பர் பணிசெய்து நம்பியை வளர்க்கும் பேறு பெற்றமையாலே இறைவரது திருவடி நீழலில் சேர்ந்து மீளாத நிலைபெற்றனர்.

Religious Legends Among Kallars 2


கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்" - திருத்தொண்டத்தொகை.
கழற்சிங்க நாயனார் பல்லவர் குலத்திலே தோன்றியவர்; சிவனடி அன்றி வேறொன்றை அறிவினிற் குறியாதவர்; வடபுலவேந்தரை வென்று அறநெறியில் நின்று நாடாண்ட வேந்தராகிய இவர் ஒரு நாள் திருவாரூரை அடைந்து திருக்கோயிலை வணங்கச் சென்றார். அப்பொழுது திருக்கோயிலை வலம்வந்து திருப்பூ மண்டபத்தை அடைந்த பட்டத்தரசி அங்கு கீழே வீழ்ந்து கிடந்த மலரொன்றை எடுத்து மோந்தாள். அவள் கையில் புதுமலரைக் கண்ட அங்குவந்த செருத்துணையார் என்னும் சிவனடியார் இவள் இறைவனுக்குச் சாத்தும் மலரை மோந்தாள் என்று வெகுண்டு அம்மலரை எடுத்து மோந்த மூக்கினை கத்தியால் அரிந்தார். பட்டத்தரசி கீழே விழுந்து அரற்றி அழுதாள். உள்ளே பூங்கோயில் இறைவரைப் பணிந்து வெளியேவந்த கழற்சிங்கர், அரசியின் புலம்பலை அறிந்து வந்து மிகவும் வெகுண்டு 'அச்சமின்றி இந்தக் கொடுஞ்செயலைச் செய்தவர் யார்?' என வினவினார் .அருகே நின்ற செருத்துணையார், 'இவள் இறைவர்க்குச் சாத்துதற்குரிய மலரை எடுத்து மோந்தமையாலே நானே இதைச் செய்தேன்' என்றார். அப்போது கழற்சிங்கர் அவரை நோக்கி, 'பூவை எடுத்த கையையன்றோ முதலில் வெட்டுதல் வேண்டும்? என்று சொல்லித் தம் உடைவாளை உருவிப் பட்டத்தரசியின் கையைத் தடிந்தார். இத்தகைய அரிய தொண்டினைச் செய்த கழற்சிங்க நாயனார் சைவநெறி தழைத்தோங்க அரசாண்டு சிவபெருமான் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும் பெருவாழ்வு பெற்றார்.

Religious Legends Among Kallars. 1


மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம்மன்னர் அரசுரிமையை தன் சிவனடித் தொண்டிற்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்து தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துச் சிவதலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப்பாடினார். அவ்வெண்பாக்களில் 24 பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப்பெறுகின்றது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் இருக்கக் காணலாம்.

Tuesday, October 27, 2009

Legends Among Kallars - 6


N.P. Manicham Errthaandaar
(Nadavai Parimanam Manicham Errthaandaar), Popularly Known as Makkal Thondar Manichanar, was a Major Philanthropist, Poprietor and Editor of Urimai Murasu Weekly magazine, Founder of Mukkulathor School, Tamilnadu Manavar Illam, Parimanam Primary School and General Secretary of Mukkulathor Sangam.Early DaysN.P. Manicham Errthaandaar was born in 1917 at Errthaandaar Patty, also known as Natarajapuram, a Small Village in Trichirapalli District, Tamilnadu, to Parimanam Errthaandaar and Unnamalai Ammal in a wealthy Kallar Family.For his higher secondary education he joined in ER Higher Secondary School. During those days there was only Brahmin students were studying in ER school, some of his Collogues (From Brahmin Society) have asked him why he has to study while he has more wealth and vast agricultural land. Manichanar was upset because of there behavior, This discriminatory attitude made him moved to Government Higher Secondary school Lalgudi, and Become Close Friend to Anbil P. Dharmalingam, during school days itself he provided food for the poors, then he Started Kallar Hostel (Kallar Manavar Viduthi) in Lalgudi for Poors, Mr. Chandrahassan (Former Leader- Raja Rajan Kalvi Panbattu Kalagam) was also staying in that Hostel. After his studies he left back to his own Village.Social WelfareBefore Independence there were only less no of schools in south Tamilnadu and poor children’s don’t have access to basic education and health facilities. In 1945 Manichanar, Founded Mukkulathor School in Thiruverumbur, Trichirapalli with the help of his Friends for the children’s of the poor. Nadigar Thilagam Sivaji Ganesan also has donated for that School.He was the Founder-Editor; Publisher of Urimai Murasu, a weekly Magazine for the Welfare of Backward classes, their Education and social Status.Manichanar Founded Tamilnadu Manavar Illam in 1954 in Kailasapuram, Trichirapalli, a hostel for orphans who either lost their father or both the parents are provided free education, food and accommodation,Mukkulathor SangamHe Joined with Pasumpon Muthuramalinga Thevar, P. K. Mookayya Thevar , Andiappa thevar and Served as a General Secretary of Mukkulathor Sangam.Manichanar Participate and Led nationwide campaigns for expanding initiatives against untouchability (of Dalits), ignorance and poverty, he exhorted backward class and Scheduled Caste peoples for Self Respect.He is the person who Made Pudhukottai Kaduvetiyar to serve for his society and Vandayar Brothers to participate in Golden Jubilee function of Mukkulathor sangam.To portray him Mukkulathor Sangam given him a title Mukkula Vendar.Later Life and DeathTill death he continued serve for his Society, poors, orphans, and for the upliftment of backward and Scheduled Castes. Manichanar Died on 24th October 1987 in Thiruverumbur, Trichirapalli.His mortal remains were buried in Tamilnadu Manavar Illam.

Legends Among Kallars - 5


Sithambaram Kandiyar Durairajah Ceylon (1905 – 1970)

Very popularly was known in Ceylon as the Kathirgama Kandiyar and VSDR Kandiyar born on the 5th August 1905 to Vadamalai Sithambaram Kandiyar and Anjalai Ammal. The first to establish the Kallar Maga Sabai in 1942 at Kandy in Ceylon. He was the President elect from 1942 to till his death on 24th December 1970. According to available information the Membership of the Kallar Maga Sabai crossed 13000 in 1969. It was recorded in the Annual General Meeting of the Kallar Maga Sabai on the 14th September 1969 that the Kallar Maga Sabai should expand its activities to other regions of Ceylon to increase its member ship to 15000 by September 1970. Many of the Members of the Organization were Estate Owners or holding high positions in various Private sector establishments and Government Departments in Ceylon. Unfortunately the coomunal violence which took place in 1970 in Ceylon totally paralyzed the Kallar maga Sabai and it came to a stand still after the death of its founder member in December 1970.

Some of the names of members of the Kallar Maga Sabai as from the available Records at the Registras General office in Kandy are as follows:

1. Sithambaram Kandiyar Durairajah – Founder & Elected President (28 Years) till his death.
Owner of 6 Estates having Coconut, Cocoa, Pepper, Cardamom and Rubber Plantations.

2. Vijaya Thevar Subbiah – General Secretary elect for more than 27 years.
Owner of Kambli Stores. Watthugamam.

3. Govindasamy Gangainattar – Treasurer elect for more than 20 years
Owner of Tennapittiya Estate. Malpana.

4. Gopala Rajapiriyar – Life Member for more than 28 years.
Owner of Coshina Estate. Ampitiya. Kandy

5. P.Karuppiah Kalingarayar – Life member for more than 26 years.
Owner of Aluvihara Estate Matale.

6. V. Rathinam Kilamudaiyar. Life member for More than 25 Years
Owner of Granlee Estate. Lindulla.

7. A Narayanasamy Thanjirayar. Life member for more than 25 Years.
Owner of Hunthana Estate. Uduwela. Kandy.

8. Karuppiah Thondaiman Soumiyamoorthy. Vice President and Life member for 20 Years.
Owner of Wavendon Group. Ramboda and the founder of Ceylon Workers Congress

Mr.Durairajah Kandiyar was responsible for the establishement of the First Cooperative Society in Malapana in Ceylon and registered himself as the 1st Member in the Society.
Built and Established the Rajawella Methodist Mission School in Pallekella Village which became the High school in the area after 20 Years and now fully controlled by the Government of Sri Lanka with a student population of more than 2000. Elected as the President of the Parent Teachers Association for more than 35 Years. Build a Mariamman Temple in his Village (Malpana) and the First Buddhist Temple (Known as Pansala) in his village.

Elected as the Managing Trustee for the Pilliyar Kovil at Kandy and held the Position till his death.

Elected as the Managing Trustee for the Kathirgamam Devanai Amman Temple, Selva Vinayagar Temple, Sella kathirgamam Temple, Santhana Malai and Valli Malai temple etc, the positions
which he held till his death. Donated lands of more than 1500 Acres for the colonization scheme of the Govt. of Ceylon for the land less poor people. Build and maintained more than 20 Wells and 11 Ambalams for travelers to rest and proceed in various Villages near to his home town.

After his death on 21st December 1970 the family shifted to various parts of the world and few living now in India.

Legends Among Kallars - 4


வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார்.

அரித்துவாரமங்களம், இவ்வூரின் புகழுக்கு புகழ் சேர்த்தவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்(1870) பிறந்து இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில்(1920) இயற்கையெய்திய கோபாலசாமி இரகுநாதஇராசாளியார்.

இராசாளியார்.அவர்களின் வாழ்க்கை இற்றைய இளைஞர்களுக்கு நல்ல பாடமாகவும் வழிகாட்டியாகவும் வழித்துணையாகவும் அமைந்துள்ளது. தன் மாமன் வேலு வாண்டையாரின் திருமகள் பெரியநாயகியம்மையை வாழ்க்கைத் துணையாக ஏற்று வையகம் போற்ற வாழ்ந்தார். இளம் வயதில் தந்தையை இழந்த நிலையில் கல்லூரி படிப்பை முடிக்க இயலாமல் குடும்ப சுமையை ஏற்றுக்கொண்டார். தமிழ் மொழியின்பாலும் இலக்கியங்களின்பாலும் மிகவும் ஈடுபாடு கொண்ட இராசாளியார் பண்டைய இலக்கியநூல்கள் பலவற்றை தேடிப்பெற்று தம் ஊரிலேயே ஒரு நூலகம் அமைத்தார். தமிழார்வம் காரணமாக தன் செல்வச்செழுமையை பயன்படுத்தி கிடைப்பதற்கரிய பல சுவடிகளைப் பெற்று தம் நூலகத்தை மிகச் சிறந்த நூலகமாக அமைத்தார். இங்கு வருகை தந்த திருவாடுதுறை ஆதினகர்தர் நூலகத்திலுள்ள அரிய நூல்களையும் சுவடிகளையும் பார்த்து இந் நூலகத்திற்கு சரஸ்வதி மகால் எனவும் பெயர் இட்டார். தமிழ்த் தாத்தா என்று அழைக்கபடும் உ.வே.சாமிநாத ஐயர் புறநானூறு ஒலைச்சுவடிகளை இராசாளியார் அவர்களிடம் தான் பெற்று அச்சிட்டார் என்பது வரலாறு.இராசளியார் அவர்களின் தமிழார்வமும் மொழிப்பற்றும், அறிவுப்பசியும் அதைத்தீர்துக்கொள்ள தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் எங்கு கூட்டங்கள் நடந்தாலும் சென்று பங்கேற்கும் பாங்கும் தனிச்சிறப்பாகும். நான்காம் தமிழ் சங்கம் எனப்போற்றப்படும் இன்றைய மதுரைத் தமிழ்ச் சங்கத்தை பாண்டித்துரை தேவருடன் இனைந்து உருவாக்கியதில் இராசளியார் பங்கும் ஒரு வரலாறு. இராசளியார் தஞ்சையில் இருந்த போது தஞ்சைத் தமிழ் சங்கம் செயல்பாடற்று போனது குறித்து கவலையுற்ற புலவர் பலர் இராசளியார் அவர்களிடம் தூண்டியதன் விளைவாக கரந்தையில் புதிய தமிழ் சங்கம் தோற்றுவிக்கப்பட்டதும் வரலாறு.கரந்தை தமிழ்ச்சங்க நூலகத்திற்க்குத் தம் நூலகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான நூல்களையும் வழங்கி, குன்னூரில் ஒரு நூலகத்தையும் அமைத்து அங்கு தொல்காப்பியருக்குச் சிலையும் நிருவி தமிழ் வளர்த்தார் பண்டிதர் இராசளியார். இவ்வாறு இலக்கியம், சமயம், அரசியல், ஆகிய துறைகளில் ஈடுபட்டு புகழ் பெற்ற இராசளியார் குற்றபரம்பரை சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துத் தம் சமூக மக்களின் மேன்மைக்கு வழி செய்தார். செல்வத்துப் பயனே ஈதல் என்பதற்கிணங்க வள்ளமை மிக்க நள்நிதிச் செல்வராகத் திகழ்ந்தார். இவர் வாழ்வு போற்றுவதற்க்கும், பின்பற்றுவதற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

Legends Among Kallars - 3


A.Veeriya Vandayar

Rao Bahadur Sri. A. Veeriya Vandayar, popularly known as Poondi Vandayar, was a Pilanthropist, Founder of Sri Pushpam College- Poondi and Long-standing Leader for Kallar Mahajana Sangam.Early Life.Veeriya Vandayar was born in 1899 at Poondi in Tanjure District, Tamilnadu. In the Royal Family of Poondi.Social WelfareVandayar Founded Sri Pushpam College in 1956, at that time there were no College for technical education in Tanjure, except Kudanthai Arasu Kalluri, he started college for the upliftment of economically backward people, Late Rao Bahadur Sri. A. Veeriya Vandayar after visiting European countries established the college with a vision of new ideas. The institution is named after the family deity Sri Pushpa Vaneswara. This college named after him is a fitting tribute paid to the beacon light to shatter the ignorance of the rural mass. The entire family members are serving the society in this area for the upliftment of economically backward people.Social WelfareHe was the Long-standing Leader for Kallar Mahajana Sangam until it was merged into Mukkulathor Sangam, he led nationwide campaigns for upliftment of his society and economically backward people.DeathTill death he served for economically backward people, his Society and poors, he died on 1970 in Poondi, Tanjure.

The Legends Among Kallars - 2


சிவாஜி கணேசன் (அக்டோபர் 1, 1927 - ஜூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
வாழ்க்கைக் குறிப்பு
'சிவாஜி' கணேசன், சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக சீர்காழியில் பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், ராம்குமார் மற்றும் பிரபு; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி.
திரைப்பட வாழ்க்கை
'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளைய் மிகைப்படுத்திக் காட்டினால்தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.
இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்தமாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.
அரசியல் வாழ்க்கை
1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
விருதுகளும் கௌரவங்களும்
ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது.
பத்ம ஸ்ரீ விருது (1966)
பத்ம பூஷன் விருது (1984)
செவாலியே விருது (1994)
தாதா சாகேப் பால்கே விருது (1997)
1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்.

The Legends Among Kallars - 1


Karuppiah Thondaiman Soumiyamoorthy. Ceylon. (1913 –1999)

Born in Thirupathoor of Pudukkottai District of Tamil Nadu in 1913, Saumiyamoorthy Thondaiman came to Ceylon in 1924 at the age of 11. His father had migrated to Ceylon as a kangany (Supervisor) and through hard work and enterprise; he became the owner of an estate. He became a planter and so did many members of his extended family. In 1940 he entered politics as Chairman of the Reception Committee of the Gampola Branch of the Ceylon Indian Congress. He led his people through thick and thin for nearly six decades.
The Ceylon Indian Congress led by Thondaiman secured 8 seats in the first Parliament out of a total of 101. Thondaiman was elected from the Nuwara Eliya seat. Upcountry Tamil votes influenced 12 other electorates in favour of the left parties. In 1950, the name of Ceylon Indian Congress was changed to Ceylon Workers Congress and it became a powerful force as it controlled a large and strong trade union. This was done as the nomenclature ‘Indian’ was misleading and mischievous. He was the elected member of the International labour organization of the United Nations the Post which he held till his death.
In 1960 and 1965 Thondaiman was appointed Member of Parliament to represent the stateless Tamils as they had been earlier disenfranchised. Constitutionally, it was possible to appoint members from unrepresented peoples. When the number of Tamils registered as citizens increased, their influence in elections was felt. In 1971, after 30 years, he again won an election through Tamil votes in Nuwara Eliya. In 1978 he was appointed as cabinet minister of Rural Industries. From then on, he invariably held a ministerial post till his death. He used his ministerial position to uplift the economic position of the estate people and to regain lost rights. In 1994 the CWC secured nine seats in Parliament and became a force to reckon with.
Thondaiman used his political and ministerial position to win back some of the rights of his oppressed people. They were successful in extracting their civic rights. Wages were also increased due to trade union action. Thondaiman succeeded because he was a master strategist and used his cabinet position to obtain concessions. He used the strength of the CWC trade unions to pressurize the government and estate employers. He used the Tamil vote bank in local, parliamentary and presidential elections. He used the voting power of the CWC in Parliament to influence the formation of governments. He came to be regarded as king maker, much to the chagrin of die-hard Sinhalese leaders. In 1988 the government passed an Act to grant citizenship to Upcountry Tamils, who had been rendered stateless, after their mass deportation under the infamous Srimavo-Shastri Pact.
Thondaiman died at the age of 86 in 1999, while he was still a cabinet minister. He was given a well-attended state funeral, perhaps the only Tamil to be given such a honors. Over a hundred thousand people attended his funeral. Saumiyamoorthy Thondaiman was a dynamic leader of the Upcountry Tamils and was invariably labelled an uncrowned king.

HISTORY OF KALLARS - THE CHOLA DYNASTY


Photograph of Kallanai


சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கி.பி பத்தாம், பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. சோழர்களின் கொடி புலிக்கொடி. அவர்கள் சூடும் மலர் ஆத்தி.
சோழ நாடு
தமிழ் மரபுகளின்படி பண்டைய சோழ நாடு தற்காலத் தமிழ் நாட்டின் திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. சோழநாடு, கடலை நோக்கிச் சரிந்து செல்கின்ற ஆனால் பொதுவாக, மட்டமான நில அமைப்பைக் கொண்டது. காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளுமே சோழ நாட்டின் நிலத் தோற்றத்தின் முக்கியமான அம்சங்கள். பொன்னி என்றும் அழைக்கப்படுகின்ற காவிரி ஆற்றுக்குச் சோழநாட்டின் பண்பாட்டில் சிறப்பான இடம் இருந்தது. ஆண்டுதோறும் பொய்க்காது பெருகும் காவிரி வெள்ளம் சோழ நாட்டு மக்களுக்கு ஒரு விழாவுக்கான ஏதுக்களில் ஒன்றாக இருந்தது. ஆண்டு தோறும் கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு விழாவில் அரசர்கள், ஆண்டிகள் எல்லோருமே பங்கு பெற்றனர்.
உறையூர் கி.பி 200 ஆம் ஆண்டுக்கு முன் சோழரின் தலை நகரமாக விளங்கியது. அகழிகளாலும், மதிலாலும் சூழப்பட்ட பாதுகாப்பான நகரமாக இது விளங்கியது. காவேரிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் காவிரிக் கழிமுகத்துக்கு அண்மையில் அமைந்திருந்த ஒரு துறைமுக நகராகும். தொலமியின் காலத்திலேயே காவிரிப்பூம் பட்டினமும், இன்னொரு துறைமுக நகரான நாகபட்டினமும் சோழநாட்டின் முக்கிய துறைமுக நகரங்களாகப் பெயர் பெற்றிருந்தன. இவ்விரண்டு பல்லின மக்கள் வாழ்ந்த நகரங்களும், வணிக மையங்களாக விளங்கிப் பல மதத்தவரையும் கவரும் இடங்களாக இருந்தன. பண்டைய ரோமர்களின் கப்பல்களும் இந்தத் துறைமுகங்களுக்கு வந்தன. கிறீத்து சகாப்தத்தின் தொடக்க காலங்களைச் சேர்ந்த ரோமரின் நாணயங்கள் பல காவிரியின் கழிமுகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சோழ நாட்டின் இன்னொரு முக்கிய நகரம் தஞ்சாவூர் ஒன்பதிலிருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை சோழப்பேரரசின் தலைநகரமாக விளங்கியது. விஜயாலயன் தஞ்சையைத் தன் தலைநகரமாகத் தேர்ந்தெடுத்து வெற்றிகள் பல பெற்றான். பல்லவ நாட்டைக் கைப்பற்றிய பிறகு காஞ்சியை இரண்டாம் தலைநகரமாகக் கொண்டு அவ்வப்போது சோழ அரசர்கள் அங்கிருந்தும் ஆட்சிப்பொறுப்பை கவனித்துவந்தனர். எனினும் தஞ்சையே முக்கிய நகரமாக விளங்கியது. சிறிது காலத்திற்கு அப்பால் தஞ்சை அதன் முதன்மை இடத்தை இழந்தது. இராஜராஜனின் மகன் முதலாம் இராஜேந்திரன் கங்காபுரி என்ற புதியதோர் திருநகரை உருவாக்கி அதைத் தன் தலை நகராகக் கொண்டான். பின்னர் பதினொன்று முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது. 'சோழ கங்கம்' என்ற அழகிய பெரிய ஏரியைக் கொண்ட இந்நகர் பல நூற்றாண்டுகளாய் இராஜேந்திரனின் பெருநோக்குக்கும் பெருமைக்கும் சின்னமாய் விளங்கி இருந்தது.
கும்பகோணத்தை அடுத்துள்ள பழையாறையில் ஒரு அரண்மைனையும், முதலாம் இராஜராஜனுடைய பெயரிலேயே "அருள்மொழி தேவேச்சுரம்" என்ற கோவிலும் இருந்தது. இந்த அரண்மனையில் இராஜராஜனின் தமக்கை குந்தவை பல காலம் விரும்பித் தங்கியிருந்தாள் என்றும் இராஜராஜனும் சிலகாலம் தங்கியிருந்ததாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன. முதலாம் இராஜேந்திரன் மதுரையில் மிகப் பெரியதோர் அரண்மனை கட்டியதும் தவிர உத்திரமேரூர் போன்ற இடங்களிலும் சோழர் அரண்மனைகள் இருந்ததாக கல்வெட்டுக்களில் இருந்து அறிகிறோம்.
முதலாம் இராஜராஜ சோழன்
இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.
இவன் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னன் அழைக்கப்பட்டான். இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராஜ ராஜ சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 12 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவன் காலத்திலும் இவன் மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராஜராஜனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.
கேரளப் போர்
இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றான். இவன் ஆட்சிக் காலத்தில் முதற்போர் கேரள நாட்டுடன் நடந்தது, இப்போரின் விளைவைப் பற்றி இம்மன்னனது நான்காம் ஆண்டு முதலாகக் கல்வெட்டுக்களில் காணப்படும், 'காந்தளூர்ச் சாலை கலமறுத்த' என்ற பட்டத்தால் விளக்கப்பட்டுள்ளது. இப்பட்டம் இராஜராஜனின் நான்காம் ஆண்டு கல்வெட்டிலேயே காணப்பட்டாலும், எட்டாம் ஆண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுகள் கேரளத்திலும், பாண்டிய நாட்டிலும் காணப்படவில்லை என்பதால் வெற்றி கொண்ட பகுதியைத் தன் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவர சில ஆண்டுகள் பிடித்திருக்கலாம் என்று தெரிகிறது.
இம்மன்னனின் வெற்றி பற்றித் தெளிவாகக் கூறும் திருவாலங்காட்டுப் பட்டயங்கள், இவன் முதன் முதலில் தென் திசையிலேயே தன் வெற்றியை நிலை நாட்டினான் என்று கூறுகிறது. பாண்டிய மன்னன் அமரபுஜங்கனை சிறைபிடித்தான் என்று கூறும் இக்குறிப்பு, 'சூரிய வம்சத்தின் ஒளிவிளக்கான இந்த தண்டநாதன் பிறகு விழிஞம் என்னும் தவிர்க்க முடியாத கடற்கோட்டையைப் பிடித்தான். வெற்றித் தெய்வத்தின் நிலையான இருப்பிடம் என்று சொல்லத்தக்க சிறப்புடையது அக்கோட்டை. பாண்டிய, கேரள சிங்கள நாடுகளை தென்னாட்டு அரசுகள் மூன்றும் இணைந்திருந்து. இராஜராஜன் ஆட்சியிலும் இக்கூட்டணி செயல்பட்டது. இம்மன்னனின் தென் திசைப் போரில் பாண்டியர், சேரர் இருவரையுமே எதிர்க்க வேண்டியிருந்தது. அப்போது சேர மன்னனாக இருந்தவன் பாஸ்கர ரவிவர்மன் திருவடி(கிபி 978 - 1036). இம்மன்னனின் கல்வெட்டுகள் திருவாங்கூரின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.
மலைநாடு
கி.பி 1008ம் ஆண்டுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இப்படையெடுப்பின் பொழுது உதகைக் கோட்டையைத் தாக்கி கைப்பற்றியது முக்கியமான நிகழ்ச்சியாகும். மேற்கு மலைப் பகுதியான மலைநாடு அல்லது குடமலைநாடு இப்போதைய குடகு நாடாகும். உதகைக் கோட்டை குடகின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையிலோ அல்லது சிறிது தென் திசையிலோ இருந்ததாகக் கொள்ளலாம்.
கூறுகிறார் இம்மன்னனின் ஆட்சியைப் பற்றி கூறும் கலிங்கத்துப் பரணி உதகையைக் கைப்பற்றியதை மட்டுமே குறிப்பிட்டுள்ளது. சேர நாட்டில் தான் பிறந்த சதய நாள் விழாவைத் தொடக்கி வைத்தான் என்றும் இராஜராஜனுடைய தூதுவன் அவமதிக்கப்பட்டதால் அந்தப் பழியைத் தீர்க்கும் வகையில் பதினெட்டு காடுகளை இவன் கடந்து சென்று உதகையைத் தீயிட்டு அழித்தான் என்றும் மேலும் இது இராஜராஜ சோழனின் பெரும் சாதனை என்றும் ஒட்டக்கூத்தர் தமது மூன்று உலாக்களிலும்.
ஈழப் போர்.
இராஜராஜனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்று என்பதை இம்மன்னனது 'திருமகள் போல' என்று தொடங்கும் கி.பி. 993ம் ஆண்டு மெய்க்கீர்த்தியால் அறியலாம். 'கொடுமை மிக்க சிங்களர்கள் வசமிருந்த ஈழ மண்டலத்தை இம்மன்னன் கைப்பறியதன் மூலம், இவனது புகழ் எண் திசைகளிலும் பரவியது', 'தஞ்சையில் இராஜராஜ சோழன் எடுப்பித்த சிறந்த கோயிலுக்கு ஈழத்தின் பல கிராமங்களை இவனுடைய 29ம் ஆண்டில் தானமாக அளித்தான்' என்றும் ஈழப்படையெடுப்பைப் பற்றி திருவாலங்காட்டுப் பட்டயங்கள் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன.
இப்படையெடுப்பின் பொழுது ஈழ மண்டலத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தவன், கி.பி 981ம் ஆண்டில் பட்டம் பெற்ற ஐந்தாம் மகிந்தன் என்பவனாவான். முதலாம் இராஜேந்திரனின் தலைமையில் சோழப்படை சென்ற பொழுது இம்மன்னனே ஆட்சியில் இருந்தான். ஆனால் இராஜராஜனின் இப்படையெடுப்பைப் பற்றி மகாவமிசம் குறிப்பிடவில்லை. 'மகிந்தன் ஆட்சியில் பத்தாம் ஆண்டிற்குப் பிறகு(கி.பி 991) ஓர் இராணுவப் புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பெரும் குழப்பம் விளைந்தது; கேரள கன்னட வீரார்களின் செல்வாக்கு இவன் நாடு முழுவதும் பரவியதே இந்த குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம். இராணுவ புரட்சியின் விளைவாய் மகிந்தன், ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டான். இதனால் ஈழ மண்டலத்தின் வடபகுதியை இராஜராஜன் எளிதில் கைப்பற்றி மும்முடிச் சோழ மண்டலம் என்று அதற்குப் பெயரிட்டான்.' என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
ஈழப் படையெடுப்பின் விளைவுகள்
சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அனுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது. இந்நகரில் இராணுவ காவல் நிலையமாக விளைங்க பொலன்னறுவை சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. இராஜராஜ சோழனுக்கு முன்னர் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் மன்னர்கள், அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராஜராஜ சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான்.
பிற்காலத்தில் சிங்கள வேந்தனாகிய முதலாம் விஜயபாகு, அனுராதபுரத்தில் முடிசூட்டப் பெற்றான் என்றாலும் பொலன்னறுவையைத் தொடர்ந்து தன் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தான்.
ஈழத்தில் சோழக் கோயில்கள்
இராஜராஜனின் கல்வெட்டுகள் பல, ஈழத்தில் உள்ளன. ஈழத்தைச் சோழர் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் பொலன்னறுவையில் இராஜராஜன் சிவனுக்கு ஒரு கற்றளி எடுப்பித்தான். பொலன்னறுவை நகரின் சுவர்களுக்குள் அமைந்துள்ள இந்த அழகிய சிவாலயம் ஈழ நாட்டில் காணப்படும் புராதனச் சின்னங்களில் இன்றளவும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் கட்டட அமைப்பைக் காணும் பொழுது இது கி.பி 10 மூதல் 12ம் நூற்றாண்டுகளுக்குள்ளேயே கட்டப்பட்ட சோழர்காலத்துக் கோயில்கள் போன்றேதஞ்சை பெரிய கோயில் இவ்வகைக் கோயில்களில் மிகவும் சிறந்தது) அமைந்துள்ளது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில்
இராஜராஜ சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராஜராஜேஸ்வரம் என்னும் சிவன் கோயில், தென் இந்திய வரலாற்றுப் பகுதியில் தலைசிறந்த சின்னமாகும் தமிழ் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது. இராஜராஜனின் 25ம் ஆண்டின் 275ம் நாளில் இது கட்டி முடிக்கப்பட்டது.
குடும்பம்
இராஜராஜன் பல மனைவியருடன் வாழ்ந்தாலும், குறைந்த அளவிலான மக்களைப் பெற்றிருந்தான். பல கோயில்களுக்கு நிவந்தங்கள் அளித்ததாக கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் இவனது மனைவிமார்களின் ஏறக்குறைய பதினைந்து ஆயினும் உலக மகாதேவி என்று அழைக்கப்பட்ட தந்திசக்தி விடங்கி என்பவளே பட்டத்தரசியாக விளங்கியவள். இராஜராஜ சோழனின் ஆட்சியின் 29ம் ஆண்டில் திருவிசலூரில் இம்மன்னனுடன் இருந்தாள், திருவிசலூர்க் கோயிலில் இம்மன்னன் துலாபாராம் புகுந்த பொழுது தந்திசக்தியும் இரணிய கர்ப்பம் புகுந்தாள்.
இராஜராஜனின் ஒரே மகனான இராஜேந்திரனின் தாயார், திருபுவன மாதேவி என்றழைக்கப்பட்ட வானவன் மாதேவி ஆவாள். இராஜராஜனின் அக்காள் குந்தவை, வல்லவராயர் வந்தியத்தேவரை மணந்தாள். கல்வெட்டுகள் குந்தவையை, ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார் என்றும் பொன்மாளிகைத் துஞ்சின தேவரின் புதல்வி என்றும் குறிப்பிடுகின்றன. தன் தமக்கையிடத்தில் இராஜராஜன் பெருமதிப்பு வைத்திருந்தான் தான் எடுப்புவித்த தஞ்சை பெரிய கோயிலுக்கு, தன் தமக்கை கொடுத்தவற்றை நடு விமானத்தின் கல்மீது, தான் கொடுத்தவற்றைப் பற்றி வரைந்துள்ள இடத்திற்கு அருகே வரையச் செய்ததோடு, தன் மனைவிமார்களும் அதிகாரிகளும் கொடுத்தவற்றைச் சுற்றியுள்ள பிறைகளிலும், தூண்களிலும் பொறிக்கச் செய்தான்.
இராஜராஜன் மூன்று புதல்விகளைப் பெற்றிருத்தல் வேண்டும், ஏனெனில் திருவலஞ்சுழியிலுள்ள ஒரு கல்வெட்டு சாளுக்கிய விமலாத்தினை மணந்த இளைய குந்தவையைத் தவிர, மாதேவடிகள் என்பாளை நடு மகளாகக் குறிப்பிட்டுள்ளது.
கரிகால் சோழன்
இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.
கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன.
சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. இவன் அழகான போருக்குரிய தோள்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான், கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.
ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்
புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு சிறைக்காவலரரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.
கல்லணை
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பழமையான அணையாகும். இது கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு அருகில் உள்ளது.
இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போது புழக்கத்தில் இருக்கும் அணைகளில் இதுவே மிகவும் பழமையானது என்று கருதப்படுகிறது. இதுவே மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.
கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது.
கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

Na.Mu. Venkadasamy Nattar


காலத்தால் அழியா புகழ் பெற்ற கள்ளர் சரித்திர நாயகன் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

தமிழக மக்களால் நாட்டர் ஐயா என பாசமுடன் அழைக்கப்படும் நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றுக்கருகிலுள்ள நடுக்காவேரி என்னும் சிற்றூரில் கள்ளர் குலத்தோன்றலாகிய வீ. முத்துச்சாமி நாட்டாருக்கும் தைலம்மாளுக்கும் நன்மகனாய் 12-04-1884 இல் பிறந்தார். தம் சிறு வயதிலெயே ஆசிரியர் எவருடைய உதவியுமின்றித் தாமே தமிழ் இலக்கண இலக்கியங்களையும் சைவ சித்தாந்த நூல்களையும் ஐயம் திரிபரப் பயின்று, மதுரை தமிழ் சங்கம் நடத்திய பிரவெச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் மூவாண்டில் (1905, 1906, 1907) முறையாக எழுதி முதன்மையாக தேர்ச்சி பெற்று, மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பெருமாகனாராகிய பண்டித் துரை தேவர் அவர்களால் தங்கப் பதக்கக்ங்களும், தங்கத் தோடாவும் அளிக்கப் பெற்றுப் பெருமை அடைந்தார்கள். தாமே பயின்ற தமிழ் பேராசிரியரின் அறிவாற்றலை அறிந்து அவரைப் ப்ணிபுரிய அழைத்த கல்வி நிருவனங்கள் பல. கோயம்பத்தூர் தூய மைக்கேல் மேல் நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக ஒரு ஆண்டும் திருச்சி பிஷப் கல்லூரியில் தலைமை தமிழ் பேராசிரியரரக 24 ஆண்டுகளும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ பேராசிரியராக 7 ஆண்டுகளும் பணி புரிந்து ஒய்வு பெற்றார். பின் தமிழ் வேள் உமா மகேஸ்வரனார் அவர்கள் விரும்பியவாறு கரந்தை புலவர் கல்லூரியில் 4 ஆண்டுகள் ஊதியம் பெறாமல் மதிப்பியல் முதல்வராகப் பணி செய்து சிரப்பித்தார்கள். 1940 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தமில் மா நாட்டில் நாவலர் என்னும் சிரப்பு பட்டம் செப்பேட்டில் பொறித்து வழங்கப்பெற்றது. ஐயா அவர்கள் எழுதிய உரைகள், தமிழ் ஆராச்சி நூல்கள் பல. 1921 -22 இல் திருவருட் கல்லூரி ஒன்று நிறுவ முயற்சி செய்து நிறைவேறாமல் போக , 1925 - 26 இல் தஞ்சை அல்லது திருச்சியில் தமிழ் பல்கலைக் கழகம் ஒன்று அமைக்கப்பெற வேண்டுமென்று விரும்பி அப்போதைய அமைச்சர் டி.என். சிவஞானம்பிள்ளை அவர்கள் தலைமையில் அமைத்த செயற்குழுவில் உறுப்பினராக இருந்து செயலாற்றிச் சிற்ப்பித்தார்கள். எளிய வாழ்வும் இனிய நோக்கமும் கொண்டவர், நெஞ்சிலுரமும் நேர்மைத் திறமும் மிக்கவர். சிறந்த புலமையாளர், உயர்ந்த பண்பாளர். தம் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே தொண்டாற்றிய நாட்டர் 28-3.1944 அனறு தம் மணி விழா நடை பெறுவதற்கு இருவராத்திற்கு முன் காலமானார். அன்னாரின் உடல் பிறந்த மண்னணில் அடக்கம் செய்யப்பட்டு அதன் மேல் கற்கோயில் எழுப்பி ஆகம விதிகளின் படி பூசை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இக்காலத்தில் தமிழ் புலவர் ஒருவருக்காக எழுப்பப்பட்ட முதல் கற்கோயில் இதுவே.

நாட்டாராய்யாவின் அகன்ற அறிவு. ஆழ்ந்தபுலமை. தெளிந்த ஆய்வு. தேர்ந்த எழுத்துத்திறன். பேச்சாற்றல். படைப்பாற்றல். உரைவளம். மனவளம். மனிதநேயம். போன்ற சிறப்புகளையெல்லாம் எதிர்கால இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
எழுத்துநடை, பேச்சுநடை இரண்டிற்கும் தூய நடை எடுத்துவைத்தார். உயர்வான தமிழ் வளர்த்தார்.
உலகில் நல்ல பேர்வளர்த்தார்.
தமிழுக்குப் பெருமைதனைத்தான் வளர்த்தார்.
உலகுள்ளவரை தமிழ் வாழும்.
தமிழுள்ளவரை நாட்டார் தம் புகழ் வளரும்.

Letter From The Founder In Tamil


தலைவர் கடிதம்
விளக்கமும் வேண்டுகோளும்


வணக்கம் தமிழக சொந்தங்ளே
கள்ளர் என்ற ஓர் இனமுண்டு. களங்கமற்ற இனமென்ற பெயரும் உண்டு. கங்கை முதல் கடாரம் வரை அறியணை ஏறிய முகவரியும் உண்டு. கடல் கடந்து மும்முடி தரித்த முதல்வன் என்ற வரலாரும் உண்டு. கல்லணை கட்டியும் மைந்தன் மேல் தேரோட்டி நீதியை வணங்கியும் புவியில் பெருங்கோயில் அமைத்து, ஔவையின் வரப்புயர பா மாலையும் ரசித்து இரு ஆயிரம் பட்டங்களையும் சுமந்து பல்லாயிரம் பிறைகளைக் கண்ட வம்சமிது. காலச்சுவடுகள் எமக்களித்த அழியாப் புகழ் கண்டு வீரமுடன் செங்குருதி சிந்திய இனமிது. கள்ளர் பெருமை கொள்வொம். களம் காண்போம். கள்ளர் இனமே ஒன்று கூடுங்கள்; இனிமையுடன் புதியதோர் வரலாறு படைத்திடுவொம். வாருங்கள்!
ஆண்ட பரம்பரை அடிமைப் படலாமா?
வந்த பாதையை நாம் மறந்து விட்டால்
போகும் பாதை நமக்கு புரியாமல் போய்விடும்.

நமது கள்ளர் பேரவை குறித்து சில விளக்கங்களை நம்மோடு செயல்பட காத்திருக்கும் சொந்தகளுக்கு விளக்க கடமைப் பட்டுள்ளோம். கள்ளர் பேரவை எந்த ஓர் அரசியல் கட்சியையும் சாரமல் நமது மக்களுக்காக அவர்களின் முன்னெற்றத்திற்காக செயல்படும் ஒரு சமுதாய அமைப்பு. கடல் கடந்து உலகெங்கும் வாழும் எம்மக்களை இனைக்கும் ஒரு பேரியக்கம். இயக்கத்தின் பெயரும் கொள்கைகளும் நமது வளர்ச்சிக்கான பாதை.

இதை அடைவதற்குரிய வழிகள் பற்றி உங்கள் ஆலொசனைகளை வழங்கும்படி அன்புடன் வேண்டுகின்றோம். தமிழகத்தின் ஏழரைக் கோடி மக்கள் தொகையில் கள்ளர் கிட்டத்தட்ட இரு கோடி மக்களைக் கொண்டிருந்தாலும் நம் மக்களூக்கு கிடைக்கவேண்டிய அனைத்து உரிமைகளும் மறைக்கப்பட்டு மறுக்கப்பட்டு வருவது ஒரு வேதனையான உண்மை.

சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதி கூற்றை மறுப்பதற்கில்லை. மனித சமுதாயம் அனைத்தும் ஒரே சாதி என்ற நிலை என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றதோ, அன்று அதை நாமும் எற்றுக்கொள்வோம்

நாம் ஒரு சாதி ரீதியான அமைப்பில் ஈடுபட்டால் சமுதாயதில் உள்ள மற்ற இன மக்கள் நம்மை தவறாக அல்லது விரோதமாக நினைப்பார்களோ என்று சிலர் எண்ணுகிறார்கள். இது ஒரு தவறான கருத்து. நம் சமுதாயத்திற்கு பணியாற்றிடக் கிடைத்திடும் நல் வாய்ப்பாக இதைக் கருதிட வேண்டும்.

இன்று நம் நிலை என்ன? கல்வி வாய்ப்புகள் கிடைப்பதில் இருந்து வேலை வாய்ப்புகள் பெரும் வரை அனைத்தும் மறுக்கபடுகிறது.

ஏன் இந்த அவல நிலை?
நமது அறியாமையா?
அலட்சிய மனப்போக்கா?
அல்லது நமது சமுதாய ஒற்றுமை இன்மையா?

ஒன்றை யோசித்துப் பாருங்கள். ஒரு சமுதாயத்தில் தனி மனிதனின் வளர்ச்சிஅந்த சமுதாயத்தின் வளர்ச்சி என்று கூற முடியாது. ஆனால் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி அந்த சமுதாயத்தை சேர்ந்த அனைத்து மக்களூக்கும் ஏதாவது ஒரு வளர்ச்சியை நிச்சயம் தரும். இந்த ஒரு லட்சிய நோக்கை பெரிதாகக்கொண்டு நாம் செயல் பட வேண்டும். இன்று நாம் மௌனமாக இருந்தால் நளை நமது தலைமுறைகள் அடிமைகளாக கூனிக்குறுகி நிற்க நேரிடும். பல தலைமுறைகளாக நம் முன்ணோர்கள் செய்து வந்த தவறுகளை நாமும் செய்ய வேண்டாம். நமது சமுதாய வளர்ச்சிக்கான, ஒற்றுமைக்கான முயற்சிகளை எடுப்போம். கை கோர்த்து நடப்போம். வெற்றி காண்போம்.

தீர்வு காணத் தெரியாதவர்கள் தீர்ப்பு கோரி புலம்பாதீர்கள்.
தீர்வு காணும் முயற்சிகளின் எண்ணிக்கயை அதிகமாக்குங்கள்.
முயற்சிகளின் ஆற்றலுக்கு எல்லை இல்லை.
முயற்சி தான் தன்மானத்தின் உச்ச நிலை என்பதனை நீங்கள் உணரும்போது தீர்வு தானாக உங்களை நாடி வரும்.
இல்லை எனில், அநியாயமாக ஒருவரை நீதிபதி ஆக்கிவிட்ட அவமானம் உங்களைக் குடையும்.

நமது கள்ளர் பேரவை செயல் திட்டங்கள் யாவும் மிக கவனமுடன் செயல் பட வேண்டும். பத்தோடு பதினொன்றாக இதுவும் அமைந்துவிடக் கூடாது. நமது செயல் பாடுகள் தான் நமது அங்கீகாரம். நாம் சிறப்பாக செயல்பட அதிக உறுப்பினர்கள் வேண்டும், நமது செயல் பாட்டின் அடிப்படை தான் நமது உறுப்பினர் பெருக்கத்திற்கு வழி. நமது சொந்தங்களிடம் இதனை விளக்கமாக எடுத்துரைத்து அதிக உறுப்பினர்களை பெற்றுத்தாருங்கள். நாளடைவில் நம் செயல்பாடுகள் நமக்கு உறுப்பினர்களை தானே பெற்றுத்தரும்.

கள்ளர் பேரவை நமக்கு நாமே என்ற அடிப்படையில் நம் இனத்தின் உயர்வுக்காகவும் வளர்ச்சிக்காகவும் உருவாக்கப்பட்ட பேரவை என்பதை உணரவேண்டும்.

நம் மக்களை ஒன்று திரட்டுவது மிகவும் சுலபம் (அரசியல்)
ஒன்று பட வைப்பது தான் மிகவும் கடினம் (சமுதாய வளர்ச்சி)
தோள்முறிந்து போனாலும் போகட்டும். நமது வாள் முறிந்து போகாமல் பார்த்துக்கொள்வோம்.
நன்றி.
என்றும் அன்புடன்.
ஜெயராம் கண்டியர் கிருபாகரன்.
தலைவர் சர்வதேச கள்ளர் பேரவை

INTERNATIONAL KALLAR PERAVAI

INTERNATIONAL KALLAR PERAVAI
Email: kallarperavai@yahoo.co.uk Mobile: 0091 9790081342 (International Roaming) Web Sites: www.kallarperavai.webs.com www.internationalkallarperavai.blogspot.com 
Welcome to International Kallar Peravai.
We the Kallar Community living overseas formed the above Peravai purely with the intention of helping the needy Kallars to uplift their economic standards. Our intentions are not politically based but to identify the Kallar Community as the rulers of Tamilnadu in the yester years. We lost our pride due to various reasons and today our children are totally neglected in every sphere of activities. In terms of education, employment and economic development our gains are less and lost are more. The International Kallar Peravai is requesting each and every Kallar living in India as well as those living overseas to register with us. Whether you are rich, middle class or the Poor we need your support to build our Vision & Mission a success. Our Aim Help the needy Kallar community students to pay their School & College fee. Help Qualified Engineers, Doctors, Accountants, and other professionals including Teachers, Nurse,Carpenters, Electricians, mechanics, Drivers etc from Kallar community to find employment overseas. (Free of Cost) Help PG students to gain admission in overseas universities with part time employment to support their educational career. (Free of Cost) Arrange and fix marriage proposals for Brides and Grooms from our Data bank. (Free of Cost) Build and run Engineering, Medical and Arts Colleges in Tamilnadu to offer admissions for the students of Kallar Community. To fulfill our aim we kindly request you to fill the attached Application form and send it to us as early as possible. (No Application fee and Membership fee) Thank You. Yours Faithfully Jeyaram Kandiyar Kiruphakaran. (Founder and General Secretary) Overseas Offices:
United Kingdom. Singapore. Malaysia. India. Dubai. Qatar. Kuwait. Oman. Abu Dhabi. Canada. Australia and New Zealand.