INTERNATIONAL KALLAR PERAVAI

சர்வதேச கள்ளர் பேரவை உங்களை பாசமுடன் வரவேற்கிறது

Picture
வேறுக்கு நீர்வார்க்கும் சொந்தங்களே வணக்கம்.
சர்வதேச கள்ளர் பேரவையின் இணையத்தளத்திற்கு ஆர்வமுடன் வருகை தந்திருக்கும் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

தொல்பெரும் குடியில் தோன்றி, நல்லற் நெறி நின்று நாடாண்டு, வளம் பெருக்கி, வள்ளல் பெருந்தகையாய் வாழ்ந்து வளமார் புகழ் பெற்று விளங்கிய கள்ளர் குலம் பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்சியடைகிறோம்.

இத்தளத்தில் நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் செய்திகள் நிறையவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு இடம் பெறாத, இடம் பெற வேண்டிய செய்திகளும் உங்களிடமும் இருக்குமேயானால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் ஸ்பென்சர்வெல் மனிதனின் பயனம் என்ற ஆய்வின் முடிவுகள் தரும் தகவலின் படி கள்ளரினத்தில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரலாற்று தொடாபு உண்டு என்றும், வேறு எந்த சமூகத்திற்கும் இவ்வித குடும்ப வரலாற்று தொடர்புகள் இல்லை என்றும், நாகரீக இனங்களில் 65000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் இனம் கள்ளர் இனமென்றும், இன்று உலகலவில் பல்வேறு நாட்டு மானிடவியல் அறிஞர்களும் ஆய்வு செய்யும் இனமும் கள்ளர் இனம் என்றும் கூறுகிறார்.

எந்த ஒரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாடுகளையும் அறிந்து உரையாடி உறவு கொண்டுள்ளதோ அது தான் ஜீவனுள்ள உயிருள்ள இனமாகும். இல்லை எனில் அடையாலமற்ற மாண்ட இனமாகிவிடும்.

கள்ளர் குல இளைஞர்களே கண்மூடித்தனமெல்லாம் மண்மூடிபோக விழித்தெழுங்கள். உங்கள் இனம் காக்க நீங்கள் முன்னேற்றமடைய இன்றைய கள்ளர் தான் அன்றைய மன்னர்கள் என்று உணருங்கள்.

உங்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சொந்தம் ?

உங்களுக்கும் இந்த மண்னின் பண்பாட்டிற்கும் என்ன உறவு ?

உங்களுக்கும் இந்த மாபெரும் சோழமண்டலத்திற்கும் என்ன சம்பந்தம் ?

விடை கண்டு உயர்வு அடையுங்கள்.
ஜெயராம் கண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
இங்கிலாந்து.



Saturday, November 23, 2013

சர்வதேச கள்ளர் பேரவை உங்களை பாசமுடன் வரவேற்கிறது

Picture


வேறுக்கு நீர்வார்க்கும் சொந்தங்களே வணக்கம்.
சர்வதேச கள்ளர் பேரவையின் இணையத்தளத்திற்கு ஆர்வமுடன் வருகை தந்திருக்கும் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

தொல்பெரும் குடியில் தோன்றி, நல்லற் நெறி நின்று நாடாண்டு, வளம் பெருக்கி, வள்ளல் பெருந்தகையாய் வாழ்ந்து வளமார் புகழ் பெற்று விளங்கிய கள்ளர் குலம் பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்சியடைகிறோம்.

இத்தளத்தில் நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் செய்திகள் நிறையவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு இடம் பெறாத, இடம் பெற வேண்டிய செய்திகளும் நிறையவே உங்களிடமும் இருக்கும் என்பதிலும் கருத்து வேறுபாடுகள் இல்லை. தங்களிடம் பண்டைய தமிழ் மொழியின், கள்ளர் இனத்தின், பண்டைய தமிழ் திரு நாட்டின், ஒரு பண்பு மரபின், ஒரு பண்பாட்டின், ஒரு இறைமையின் வழிவழி தொல் பழ மரபு சுட்டும் ஆவணங்களும் அகழ்வராயிச்சிக் குறிப்புகளும் இருக்கலாம்!

முதிர்காலம், முதுகாலம், சங்காலம் முதல் தமிழகத்தில் சிறப்புற்று விளங்கிய குறுநில மன்னர் குடிகள் பலவாகும், அவற்றுள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை சிறப்பு வாய்ந்த கள்ளர்குல மரபுகள் பலவாகும் அத்தகைய வரலாற்றுச் சுவடுகள் உங்களிடமும் இருக்குமேயானால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

"கள்ளர்குல மறவர்களாக முன்நாளில் சாதித்தோம்
"கள்ளர்குல சந்ததியினர்களாகஇந்நாளில் சாதிப்போம்
"நம்குல வழித்தோன்றல்கள் பின்நாளில் வளமுடன் வளர்ந்திட வழிகள் பல படைத்திடுவோம்"

உயிரற்ற ஓலையில் உணர்வற்ற எழுத்தாணியால் எழுதி, படிக்கத் தெரியாத பெட்டகத்தில் பதுக்கி வைப்பவை மட்டும் வராலாற்று ஆதாரங்களாகி விடமுடியாது. காலங் காலமாக காதால் கேட்டு, மனதால் புடம் போட்டு வாயால் பேசுகின்ற மரபு வழிக்கதைகளும் பாடல்களும் மறைக்கவும், மறுக்கவும், மறக்கவும் முடியாத சான்றுகள்

கள்ளர் அன்றும் இன்றும் என்றும் அவன் ஒரு சரித்திரம் அவனே அவனை உருவாக்கி அவனே அவனை அழித்தும் கொன்டுள்ளான். இதுவும் வரலாறு.

சோறுடைத்து சோணாடு என்ற சோழநாட்டின் தலைநகரை பீடார் உறந்தை என்பர்!

காவிரியின் கழிமுகத்தே சோழ்னின் கடற்கரை கோநகர் பட்டினமாம் ஒலிபுனல் புகார் என்பர்!

நன்னன் பெருமான் நல்லாட்சி தந்தவூர் பாழிப்பேரூர் என்பர்!

மலையமான் மலடர் கோமான் காரிவள்ளல் வாழ்ந்த வளமான ஊர் திருக்கோயிலூர்ப் பேரூர் என்பர்!

அதியமான் நெடுமான் அஞ்சி ஆய்ந்தவூர் தகடூர் என்பர்!

தொண்டைமானின் தொன்மையும் வளமையும் கொண்ட ஊர் காஞ்சி என்பர்!

வையாவிக் கோப்பெரும் போகனின் வளநகரை பொதினி என்பர்!

பல்லோருக்கும் வாரி வழங்கிய பாரிவள்லல் வழ்ந்த ஊர் பறம்புமலைப் பேரூர் என்பர்!

ஓரிவள்லல் வீற்றிருந்து ஒப்பற்ற ஆண்மையுடன் காத்துவந்த ஊர் கொல்லிமலைப் பேரூர் என்பர்!

வேளீர்கோன் குடியமர்ந்த குன்றமும் அழுந்தூர் என்பர்!

சோழ மண்ணை மீட்டெடுத்த விஜயலாயன் வாழ்ந்தவூர் பழையாறு என்பர்!

மாமன்னன் ராசராசன் பெருங்கோயில் படைத்த ஊர் தஞ்சை என்பர்!

அவன் மைந்தன் கொண்டவூர் கங்கைகொண்ட சோழபுரம் என்பர்!

இவ்வூர்களில் எல்லாம் மறப்பண்பு மிகுந்து அறப்பண்பு கொண்டு வளமுடன் வாழ்ந்தவர்கள் கள்ளர் என்பர்!

தங்களின் ஆவணங்களை kallarperavai@yahoo.co.uk என்ற இணைய முகவரிக்கு அனுப்பிவைக்கும் படி தாழ்மையுடன் விரும்பிக்கேட்டுக்கொள்கிறோம்.

"எங்கோ எட்டாத தொலைவில் பிழைப்பு நாடி சென்று ஊரை, உறவை, நட்பை விட்டு விலகி நிற்கும் நாம்,  நமது உறவினை வளர்த்து உயர்ந்து நிற்போம்"

இத் தளத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பதிவுகளையும் பகிர்ந்து கொள்ளுங்ககள், நம்மவர்கள் பயன் பெறட்டும்.

"சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொல்லும் புதிது
ஒளிமிகு எம் வரலாறு எந்நாளும் அழியா வரம் பெற்று ஒளிரட்டும்"


இத் தளத்திற்கு வருகை தந்ததன் மூலம் சிறிதளதாவது மகிழ்ச்சியும், உற்சாகமும், நம்பிக்கையும், அமைதியும், நல்ல மனமாற்றத்தையும் உணர்ந்தீர்கள் என்றால் அதுவே எங்கள் முயற்சிகளுக்கும் எழுத்துக்கும் கிடைத்த நல்வாழ்த்துக்களாக மனமுவர்ந்து ஏற்றுக்கொள்வோம்.
நன்றி.
சர்வதேச கள்ளர் பேரவை.


நம்முன்னோரளித்த அருஞ்செல்வம்

Picture
வரலாறு என்பது மனித இனம் வளர்ந்த வகைகளையும், அவற்றின் கலை, பண்பாடு, நாகரிகம் பற்றிய செய்திகளையும் தொகுத்து இனிவரும் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கு உதவும் வகையில் அளிக்கும் செயற்பாடாகும். 

குலமின்றி இனமில்லை, இனவுணர்வின்றி பண்பாட்டு வளர்ச்சிக்கு வழியே இல்லை. உலகில் வாழும் 700 கோடி மக்களில் நமக்கென்று ஒரு தனித்த அடையாளத்தை தேடித்தருவது தான் குலத்தின் பெருமை. கடலில் கலக்கும் ஒவ்வொரு நீர்துளிக்கும் தனித்துவம் உண்டு. மானுட சமுத்திரத்தில் நாம் அடையாளம் இழந்து விடாமல் நமக்குகென்று தனியாக ஒரு முகத்தையும், முகவரியையும் தருவதுதான் எமது இனமும் குலமும். ஒவ்வொரு பறவைக்கும் தன் கூடே தனியழகு என்ற உண்மையை நாம் எப்போது உணரப்போகிறோம்?

மனுகண்ட சோழனும், அறம் கண்ட சிபியும், நிறைகண்ட செம்பியனும், காவிரி கரைபடைத்த கரிகாலனும், வானுயர் கோயில் தந்த ராசராசனும் வழி வந்த இனமே கள்ளர் இனம்.

வீரம் செறிந்த நெஞ்சினர், வாளெடுத்து களம் கண்ட மறவர், வேலெடுத்த குலம் என்ற நினைவுகளுடன் நம் இளைஞர்கள் சமுதாய கடமையாற்ற வீறு கொண்டெழ வேண்டுகிறோம்.

பழமையும் பெருமையும் வாய்ந்த நம் இனத்தையும் அதன் மரபுகள் மற்றும் மாண்புகள் பற்றியும் நம் வேர்களை எப்படி இந்த தலைமுறை தேடிப்போய் தெரிந்து கொள்ளப் போகிறது? யார் இதை அடையாளம் காட்டுவது?

சர்வதேச கள்ளர் பேரவை இதற்கான ஆய்வுகளை மேற் கொண்டுள்ளது. தங்களிடம் உள்ள கள்ளர் பற்றிய ஆவணங்களையும், குறிப்பேடுகளையும், சான்றுகளையும் தந்துதவுங்கள். பேருதவியாக இருக்கும்.

இந்த தலைமுறையில் வாழும் நாம், அடுத்த தலைமுறைக்கு எதனை விட்டு செல்கிறோம்? நம் காலச் சுவடுகளை வெறும் எண்ணிக்கையாகப் பார்க்காமல் எண்ணங்களாகப் படையுங்கள்.

நம் வரலாற்று பெருமைகளை பதித்து செல்ல வேண்டாமா? 
தடம் புரண்ட நம் செல்வாக்கு, உறவுக்கு பெரும் குரல் கொடுத்த நம்முன்ணோர்கள், நாம் கற்றவை, தெரிந்தவை, அறிந்தவை யாவற்றையும் பதிவு செய்திடுவோம். தேடாமல் எதுவும் கிடைக்காது என்ற பேருண்மையை அறிந்திடுவோம்.

இன்று உலகெங்கும் காணமுடியாத தனிப்பட்ட ஒரு பண்பினைக் நம் இனத்தில் மட்டும் காண்கிறோம். கடந்த மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் நாம் கொண்ட பட்டங்கள், நாகரிகம், பண்பாடு மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை மாறாநிலையில் வைத்துக் காத்துள்ள உலகின் ஒரே இனம் கள்ளரினமே. ஆயினும் சமுதாயத் துறையிலும் அரசியல் துறையிலும் முற்காலக் கள்ளர்களுக்கும் இக்கால கள்ளர்களுக்கும் உள்ள உயர்வு தாழ்வின் அளவுகள் மனச்சோர்வழிக்கும் அளவிலேயே உள்ளது.

இன்று கள்ளர் இனம் ஆட்சியுரிமை இழந்து ஓர் ஆளப்படும் இனம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆட்சிக்குடிகளின் மரபுகள் கால்வழித் தடமற்று அழிந்துவிட்டன. குருமார், கணிகள், அமைச்சர், படைத்துறைப் பணியாளர், மருத்துவர் ஆகியோர் அடங்கிய ஐம்பெரும் குழுவினர் கூடி மன்னுரிமை ஆட்சியாளருக்கு அறிவுரை வழங்கி ஆட்சி நடத்திய காலம் இன்று இல்லை. ஒரு தேசிய இனம் என்ற முறையில் கள்ளர்குல உயிர்த்துடிப்பு ஆறி அடங்கிவருகிறது என்பது கூட இன்றைய முழு அவலநிலையைச் சித்திரித்து விடவில்லை. கலைகள், தொழில்கள் மடிந்து விட்டன.பழந்தெய்வங்கள் கூட உயிர்ப்பிழந்து போயின. இந்திரனும்,பலராமனும் இன்று வணங்கப்படவிலை. மாயோன் வணக்கம் இன்று இராமன்,கிருஷ்ணன் வணக்கம் ஆகியுள்ளது.

தலை சரியாக இருந்தால் வால் சரியாக இருக்கும் என்று ஒரு சொலவடை சொல்லு வார்கள்.
தலையாட்டும் வர்க்கமாக இருக்காதீர்கள். 
தலைமை ஏற்கும் வர்க்கமாக மாறுங்கள். 
நியாயமாகவும், எதையும் எதிர்கொள்ளும் நேர்மையுடன் இருக்கும் போது எந்த நிகழ்வாலும் நம்மை சீர்குழைக்க முடியாது. நம் பாதையில் இடர் நீக்கி பயணிப்போம். நாம்பயணிக்க வேண்டியது நெடுந்தூரம். தற்பொழுது ஒரு முட்டுச் சந்தில் பயணிக்க வேண்டிய கட்டாயம். ஆனால் வெகு விரைவில் நெடுஞ்சாலைக்கு வந்தாகவேண்டும் என்ற நோக்கில் நம் பயணம் அமைய வேண்டும். மறக்கக் கூடாத பட்டியலின் ஆரம்பமே இது.
தளர்ச்சியும், வளர்ச்சியும் வெவ்வேறு பரிமாணங்கள் என்பதனை உனர்ந்துகொள்வோம்

கள்ளர் குல கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை என்பன தொப்புள் கொடி உறவின் உணர்ச்சி மிக்க ஓர் உன்னதமான வரலாறு. புதுக்கோணத்தில் புதையலாய் குலமணம் மாறாமல் தொலைந்து போன மனிதாபிமானத்தைத் தோண்டியெடுக்கும் ஓர் கலாச்சாரப் பதிவாக அமைய வேண்டும். இன்றைய தலைமுறைக்குச் சொல்லப்பட வேண்டிய ஒரு பாசப்போராட்டம். மூன்றாம்  தலைமுறைக்கு முதல்தலைமுறை பற்றிய பாசத்தை சொல்லும் ஒரு பதிவாக வேண்டும்

கள்ளர் குல வரலாற்று செய்திகளை ஆய்ந்தறிந்து தொகுத்து பாதுகாத்திடல் நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமையாகும்.

கள்ளர் இனம் பற்றிய இத்தகைய வரலாற்று விவரங்கள், பழைய ஆவணங்கள், சாசனச்சன்றுகள் மற்றும் தாங்கள் அறிந்த, படித்த, செவிவழிச் செய்திகளை சர்வதேச கள்ளர் பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

குலப்பெருமையும் உணராமல், இன உணர்வும் இல்லாமல், ஒற்றுமையுமின்றி மாற்றானுக்கு கொடிபிடித்தே மாயும் நம் இளைஞர்களை காத்திட உதவுங்கள்.

வேரை மறந்து வேறாய் மாறும் போது நமது முகவரியின் மரணம் அருகில் என்பதும் உறுதியாகிவிடும். செய்ய வேண்டிய கடமைகள் இருக்கும் போது யாசித்து பெற வேண்டிய உரிமைகளை துறந்திடுவோம்.

நம் குல பண்பாட்டையும், நாகரிகத்தையும் விளைநிலங்களான மாணவர்களின் மனவயலில் விதைத்திட உதவுங்கள் என்று சர்வதேச கள்ளர் பேரவை தங்களை உரிமையுடன் விரும்பி கேட்டுக்கொள்கிறது.

பண்டைய கள்ளர் குல நாகரிகம்
மிகப்பழைய காலத்தில் நாகரிகம் பெற்று வாழ்ந்த மக்கள் நம் இன கள்ளர் குடி மக்களே! கள்ளர் குல நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதைச் சரித்திரம் ஏற்றுக்கொள்கிறது, ஆனால் தற்கால கள்ளர் சமூகம் தனது பழைய பெருமைகளை மறந்து தன் பெருமை அறியா சமூகமாக மாறி வருகிறது.

பண்டைய காலத்தைப் போல மனித வாழ்க்கை அமைதியாக, நிதானமாகஇக்காலத்தில் செல்லவில்லை. நாம் நமது சமூக வளர்ச்சியை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளா விட்டாலும் அவற்றைப் பற்றி மேல் வாரியான பொதுச் செய்திகளையாவது  அறிந்திருக்க வேண்டுவது நாகரிகம் படைத்த நம் மக்களின் கடமையாகும்.

நமது மூதாதையர் வளர்த்துப் போற்றிய நம்குல பெருமைகளை சிறிதளவாவது அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டுவது அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும்.

நாம் முன்னேற குலம் கூடி பங்காளிச் சண்டைகளை மறந்து சமுதாய முன்னோடிகளாக நாம் மாற வேண்டும். நம் குல கூட்டமைப்புகளில் விட்டுக்கொடுக்கும் னப்பான்மை,  சபலங்களுக்கு அடிபணியாமை,லட்சியத்தில் உ றுதிப்பாடு,  உணர்ச்சிவசப்படாமை  மற்றும் விவேகத்தோடு செயலாற்றும் திறமை போன்ற பண்புகளை நமது இளைய தலைமுறையினர் கடைபிடிக்க வேண்டும். 

மரணமில்லா மரபினரின் பட்டங்கள்
பட்டப்பெயர் சுமையாக தெரிந்தல் சுமந்து பாருங்கள் அதன் வலிமையும் செயல் திறனும் உங்களை வளமிகு உச்சத்திற்கு சுமை இன்றி உயர்திவிடும்.

எம்முன்ணோர்கள் உழைப்பில் கரையாமல், களங்காமல், கலையாமல் அணிந்த மேலாடையே நம் குல பட்டங்கள். அலங்காரபிரியன் முதல் வைகைராயன் வரை ஈராயிரம் பிரளாயமே வியக்கும் பட்டங்கள். வில்லவன், வள்ளவன், ஈகைகொண்டான், நாடாள்வான் என நீளும் மரணமில்லா மரபினரின் பட்டங்கள்.

குருதி சிந்திய குலத்துக்கு பட்டங்கள்
மரித்தும் மரணமில்லா மறவர்களுக்கு பட்டங்கள்
மடிந்தும் மார்பினில் வேல் தாங்கிய மறவர்களுக்கு பட்டங்கள்
மண்கொண்ட மன்னர்களுக்கு பட்டங்கள்
மாராயம் கொண்ட கள்ளர்களுகோ பட்டமோ பட்டங்கள் பல்லாயிரம் பட்டங்கள்.

கள்ளர்குலம் அனிந்திருக்கும் மென்மையான மேல்மையான ஆடையே நம்குல பட்டங்கள். என்னற்ற தலைமுறைகளை கடந்தும், வளரும் தலைமுறைகள் கடக்க தலைநிமிர்ந்து நிற்பதுவும் எம்குல பட்டங்களே. தன்னுள் பொதிந்திருக்கும் பசுமையான நினைவலைகளையும், தன்னுல் படர்த்தியிருக்கும் பாசமிகு வலிகளின் சுமைகளையும் நம் இனறைய தலைமுறையினர் அறிந்திருக்கவில்லை என்றபோது நம் உதிர கசிவுகளின் தடுமாற்றங்களை தவிர்க்கவும் முடியவிலை, தவிக்கிறோம், தத்தளிக்கிறோம், தடம்புரண்டு தடுமாறி திசைமாறி நிற்கிறோம்.

நம் குல ஆதியினர் அணிந்திருந்த மென்மையான மேல்மையான ஆடையினை ஆர்வமுடன் போர்த்திக்கொள்ளுங்கள்.ஒவ்வொரு ஆடையும் உங்ககளுக்காக மட்டுமே சங்கம் நிறுவிய சான்றோர்களால் சலித்தெடுத்து நெய்யப்பட்டவை என்பதை அறிந்திடுங்கள். தலைமுறை பல கடந்த வம்சங்ககளின் குருதியில் நனைந்த பன்னீர் மணம் கமழும் பகட்டான ஆடைகள். கனக்கற்ற தலைமுறைகள் சுவாசித்த பட்டங்கள், யாராலும் திருடவோ, மாசுபடுத்தவோ முடியாத அழிவில்லா நிரந்தர ஆடை. பிரபஞ்சம் போற்றிடும் ஆடைதனை அணிந்துவோம், பெருமைதனை சேர்த்திடுவோம்.

கனவுகளும் கற்பனைகளும் கரைந்தாலும், கரையாமல் நிற்பதுவும் நம்பட்டங்களே, களங்கம் இன்றி கால ஓட்டத்தில் கரையாமல் காலமெல்லாம் நம்மை காத்திடும் கவசமே எம்குல பட்டங்கள். உனர்வு பூர்வமாக அனுபவித்து அணிந்து பாருங்கள் இளமை உங்களுடன் என்றும் பயனித்து அகத்தின் உனர்வை பவுர்ணமியாக்கும் அலங்காரப்பிரியனாகி விடுவீர்கள்.

நம்மூதாதரையர் கடந்துவந்த தடங்களை வரலாற்றின் துனைகொண்டு பாருங்கள், படர்ந்த வெற்றிகள், தாண்டிய படிக்கற்கள், பணியாற்றிய துறைகள், காத்திருந்த காலமும் இல்லை, காத்திருக்க வைப்பதிலும் ஆர்வமில்லை என்று ஒவ்வொண்றும் சாதனைகளின் பன்னீர் துளிகள். நம்குல பட்டங்களுடன் வாழப்பழகுங்கள் நம்குல குறுத்துக்களை வாழ்த்தும் போதும் பட்டம் சொல்லி வாழ்த்துங்கள் வளமுடன் வாழ்வீர்கள

பட்டங்களில் அறிந்தவை, கற்றவை, பெற்றவை
பட்டம் கொண்ட கள்ளர் குல மறவனுக்கு மரணம் இல்லை
ஆறானால் என்ன! நூறானால் என்ன! இறப்பு என்றேனும் ஒருநாள் உன்னைத் தேடித்தான் வரப்போகிறது. எதுவரை வாழ்ந்தாய் என்பது முக்கியமல்ல.எதற்காக வாழ்ந்தாய் என்பதே முக்கியம். நீ எந்த உயர்ந்த குறிக்கோழுடன் வாழ்ந்தாய்? உன்னால் அதை அடைய முடிந்ததா? அடைந்திருந்தால்!

நீ நிச்சயமாக மரணமடைய மாட்டாய்.
உன்னைப் பற்றி ஒருவன் தினமும் எழுதிக்கொண்டிருப்பான்,
ஒருவன் பேசிக்கொண்டிருப்பான்,
ஒருவன் நினைத்துக்கொண்டிருப்பான்.
நீ அடைந்த உயர்ந்த சிந்தனை பொருந்திய குறிக்கோல் உலக வரலாற்றில் இடம் பிடித்திருக்கும். உனக்கு மரணம் என்பது இல்லை. நீ பெற்றிருக்கும் உன் குல பட்டமே இதற்கு சாட்சி. உன் மூதாதையர் கொண்ட லட்சியங்களும், கொள்கைகளும், வெற்றிகளும் உன் குருதியில் கலந்து உன்னை இயக்குகின்றது, உனக்கு மரணமில்லை.

கள்ளர்குல பட்டங்கள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை.
மானிடர்கள் அவரவர் செய்த அருஞ்செயல்களால் வரும் சிறப்பே பெருமைக் குறியதாகும். சங்ககாலம் தொட்டு மன்னர் முதல் பலதரப்பினரும் இத்தகைய சிறப்பினை பெற்று இருந்தனர். இதனை மாராயம் பெற்றவர்கள் என்று தொல்காப்பியம் உணர்த்துகிறது. இதன் மூலம் மாரயம் என்பது சான்றோர்களாலும், அரசர்களாலும் அளிக்கப்படும் ஒரு சிறப்புப் பெயர் என்றும், அதனைப்பற்றி உலகோரின் பாராட்டுரை நெடுமொழி என்றும் வழங்கப்பட்டது. வேந்தனால் சிறப்பெய்தியோர் வேண்டும் இடங்களில் தம் சிறப்பை தாமே எடுத்துக் கூறுல் அவர்களுக்கு நிலைத்த புகழைத்தந்தது. வேந்தனால் வழங்கப்பட்ட இப் பட்டம் (மாராயம்) தம் பெயருடன் சேர்த்துக் கூறிக்கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டது.

சங்ககால வேந்தர்கள் அறிவு வலிமை, சான்றோமை, வீரவலிமை பெற்ற தம் குடிமக்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தமை சங்ககாலத்திற்கு பின்பும் இச் சிறப்புப் பெயர் மரபு தொடர்ந்து வந்துள்ளது. குறிப்பாக கள்ளர் குலம் இப் பட்டங்களை தங்களின் உயிர் காக்கும் கேடயமாக உணர்ந்து பாதுகாத்து வருகின்றனர். செங்கோல் சிறக்க செங்குருதி கொட்டியதற்காக சுமார் ஈராயிரம் பட்டங்களை சுமந்துள்ள கள்ளர் மரபு வரலாறு, உலக வரலாற்றில் ஒரு வரலாராகும்.

சோழப் பெருவேந்தர்கள் தங்களுக்குப் பட்டமுடைய பெயர்களை பூணுவதிலும் தம்மைச் சாந்தோர்களுக்கு பட்டங்களை அளிப்பதிலும் மிகுந்த அக்கரையும் விருப்பமும் கொண்டிருந்தனர் என்பதை கல்வெட்டுகளும், செப்பேடுகளும் உணர்துகின்றன.இப் பட்டங்களும், பட்டப்பெயர்களும் அரச அவையில் இருந்த சான்றோர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டன என்றும் தெரிகிறது. முற்கால மெய்க்கீர்த்திகளின் நடை சிறப்பு, அமைப்பு போன்றவை மூலம் இவை எல்லாம் புலமை படைத்த சான்றோர்களால் எழுதப்பட்டவை என்பதும் தெளிவாகிறது. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படும் பட்டப் பெயர்களை நான்கு பிரிவுகளாக அறியமுடிகிறது.

1. பேராசர்கள் தங்களின் சிறப்புகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப தாங்களே
      சூடிக்கொண்ட பட்டங்கள். 
      இராசகண்டியன், சிவபாதசேகரன், இரவி குலமாணிக்கம் போன்றவை.

2. பேராசர்கள் தங்களின் அரசுப்பிரதிநிதிகளாக இருந்த தானைத் தலைவர்களுக்கும், தம்           உறவினர்களுக்கும் குலத்தவர்களுக்கும் சூட்டிய பட்டங்கள்.
      கடாரம்கொண்டான், சோழங்கன், மாரையன் போன்றவை.

3. பேராசர்கள் தங்களின் ஆளுமைக்கு உட்பட்ட குறுநில மன்னர்களுக்கும்,
     அதிகாரிகளுக்கும், தலைவர்களுக்கும் வழங்கிய பட்டங்கள்.
     காலிங்கராயன், சேதிராயன், மழவராயன்,நாடாள்வான் போன்றவை.

4. பேராசர்கள் தங்களின் பல்வேறு கலைஞர்களுக்கும் (அரசியல் மற்றும் அதிகாரம்  
     சார்பற்ற) வழங்கிய பட்டங்கள்.
     கற்றளிப்பிச்சன். தலைக்கோலி, வாச்சிய மாராயன் போன்றவை.

கள்ளர் குல நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதைச் சரித்திரம் ஏற்றுக்கொள்கிறது, ஆனால் தற்கால கள்ளர் சமூகம் தனது பழைய பெருமைகளை மறந்து தன் பெருமை அறியா சமூகமாக மாறி வருகிறது.

இளைஞர்களின் முன்னேற்றம் தான் நம் சமுதாயத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றமாக வருங்காலத்தில் அமையும். நாம் முன்னேற ஒவ்வொரு இளைஞனும் இடர்பாடுகளை நீக்கி கல்வியிலும், தொழில் தகுதியிலும் முன்னேற வேண்டும். இளைய கள்ளர் குல சந்ததியினர் முன்னேற பாடுபடுவோம். வளர்வோம்.
சிந்திப்போம் நாம் தொடர்ந்து.

கள்ளர் பட்டங்கள் தொகுத்தவர்களின் பட்டியல்

1. ந.மு. வெங்கடசாமி நாட்டார் 
    (கள்ளர் சரித்திரம் - 1923)
    தொகுத்துள்ள பட்டங்களின் எண்ணிக்கை 348

2. சுவாமிநாத மாதவராயர் 
    (சூரிய குலக் கள்ளர் சரித்திரம் 1926)
    தொகுத்துள்ள பட்டங்களின் எண்ணிக்கை 563

3. உ.சுப்ரமணியன் 
    ( கள்ளர் சமூகத்தினரின் பட்டப்பெயர்கள் 1988)
    தொகுத்துள்ள பட்டங்களின் எண்ணிக்கை 1135

4. தட்சிணாமூர்த்தி நெடுவாண்டார் 
    (தமிழ் நாடும் கள்ளரும் )
    தொகுத்துள்ள பட்டங்களின் எண்ணிக்கை 123

5. புலமை வெங்கடாசலம் 
    (கள்ளர் வரலாறு 1996)
    தொகுத்துள்ள பட்டங்களின் எண்ணிக்கை 1370

6. முனைவர் சிவபாதம் 
    (கள்ளர் மரபினரின் பட்டப்பெயர்கள் ஒரு வரலாற்றுப் பார்வை 2009)
    தொகுத்துள்ள பட்டங்களின் எண்ணிக்கை 412

7. ராஜபூஸணம் மன்னையார் (கள்ளர் குல வரலாறு  2009) 
    தொகுத்துள்ள பட்டங்களின் எண்ணிக்கை 1127  
           
8. ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன் 
    (வரலாற்றுப்பாதையில் பெருமைமிகு கள்ளர் இனம் - 2013 In Print.)  
    தொகுத்துள்ள பட்டங்களின் எண்ணிக்கை 2027

அன்மையில் அறிந்த சிந்தைமகிழ் சிறப்புச்செய்தி
சரளாக ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். ஆதிமனிதன் போல் வாழ்கிறார்கள், பண்டமாற்று முறையில் பொருட்களை வாங்குகிறார்கள், விற்கிறார்கள். சிந்தை கவர்ந்த பெண்ணிண் கைபிடித்து மனைவியாக்க புலியின் தலையை கொய்து வரவேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு. கருங்காலி மரம் கொண்டு கடைந்து எடுத்தாற் போன்ற ஒரு தேகம், கருமை கலந்த நிறம், தொந்தி என்ற பேச்சுக்கே இடமில்லை. குரைந்தது 4 அடியாகிலும் எம்பிக்குதிக்கிறார்கள். சாம்பியா, தன்சானியா, கென்யா மூன்றும் எம் நாடு எங்கின்றனர். மருத்துவர்களுக்கு இங்கு வேலையில்லை. எல்லா நோய்களுக்கும் கரும்புச்சாறு, மிளகு, சுக்கு கலந்து கொதிக்க வைத்த பாணம் தான் மருந்து. குடும்பங்களில் 90 வயதுக்கு குறையாமல் ஒருவராவது இருக்கிறார்கள். புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. ஓடுவதும் நீண்ட நடைபயணமும் பொழுது போக்கு. சாதம் சமைக்கும்போது பட்டை நீக்கிய கரும்புத்துண்டுகளையும் சேர்த்து சமைக்கிறார்கள்.

பசும்பாலும், சோழத்தை பயிர்செய்து உணவாகவும் கொள்கிறார்கள். மண்ணும் மாட்டுச்சாணமும் கொண்டு கட்டப்பட்ட வட்ட வடிவமைப்பில் 3 மீட்டர் உயரமும்,15 மீட்டர் குறுக்கலவுகள் அமைந்த வீடுகள். வேறு பழங்குடி மக்கள் வைத்திருக்கும் பசுக்களையும் தங்களுடையது என்று உரிமையுடன் எடுத்துக் கொள்கிறார்கள். இதனை திருட்டு என்று யாரும் ஒப்புக்கொள்வதில்லை. பசுக்கள் எங்களுக்காக கடவுளால் படைக்கப்பட்டவை, எமது செல்வமும் இவையே என்றும் உறுதியுடன் கூறுகிறார்கள். உடனிருப்பவர்கள் இறந்து போனால் உடல்களை சுற்றித்திரியும் விலங்குகளுக்கு உணவாக்குகிறார்கள். யார் இவர்கள்? கென்யா நாட்டில் மசைமாறா என்ற பகுதியில் வாழும் கள்ளர்குல மறவர்கள் தான் இவர்கள். அதிகமாணோரின் பெயர்கள் செம்பி, செம்பிலி, (செம்பியண்) கங்கு, (கங்கர்) கண்டியா, (கண்டியர்)ஆய்,  (ஆய்ப்பிரியர்)  ஆவாளி (ஆவாளியார்), விடா, கலியா(கலியராயர்), கரும்பா, நண்டா,  மழவா  (மழவராயர்)  இராடா (இராடர்) கலிங்கா (காலிங்கராயர்) அதியா(அதியமான்) ஆளியா (ஆளியார்) என்று முடிவடைகின்றன.
நன்றி 
தன்சானியா டைம்ஸ்
என்றும் பாசமுடன்.
ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன். 
சர்வதேச கள்ளர் பேரவை. 
இங்கிலாந்து 


கள்ளர்

மனுச் சோழன்
Picture

கள்ளரினமொரு வரலாற்றுப் பாரம்பரிய மிக்க இனம். ஏராளமான வரலாற்று ஆதரங்களை கொண்ட இனம். உலகவரலாற்றில் கள்ளரினத்தை மிஞ்சும் அளவுக்கு ஆதரங்களை கொண்ட வேறு எந்த இனமும் இல்லை என்பதும் வரலாறு. இவ்வளவு ஆதரங்களை கொண்ட கள்ளரினத்தை கள்ளரின மக்களே அறியவில்லை என்பதும் அறிந்துகொள்ள முயற்சிக்கவும் இல்லை என்பது தான் மிகவும் வருந்தத்தக்கது. கள்ளர் வரலாறு, கள்ளர்களின் வரலாறு மட்டுமல்ல, தமிழ், தமிழர், தமிழகத்தின் வரலாறும் அடங்கியிருப்பதும் ஒரு வரலாறு.

உலகந்தோன்றிய காலத்தே சூரியமரபில் தோன்றி இற்றைக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏகாதிபதியாய் பல்லாயிரம் நகரங்களையும், எண்ணிறந்த கோயில்களையும் அளவற்ற ஆறுகளையும் கணக்கற்ற ஊர்களையும் உண்டுபண்ணி வாழையடி வாழை போல் ஆண்டு வந்த ஒரு பூர்வீக குடிகளென்பது பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெங்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கலிங்கத்துப்பரணி, பன்னிருதிருமுறை, திருமொழிப்பிரபந்தம் மூலம் அறிய முடிகிறது. ஈராயிரம் பட்டங்களை  சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட மரபினர் கள்ளர். இப் பட்டங்கள் அரசன்,தலைவன்,வீரம், நாடு, நகரம், ஆறு, ஊர், கோயில், குளம், ஏரி முதலியவற்றுடன் சம்பந்தபட்டவை என்பதனை நன்குணரலாம்

தமிழகத்தை முற்காலத்தில் பேராசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், நாடுகாவலதிகாரிகளாகவும், படை தலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினரே கள்ளர் எனப்படுவர். தொல்காப்பிய உரைத்தலைமகன் இளம்பூரணர் புறவொழகலாற்றில் விளக்கமளிக்கையில், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் எனப்பட்டனர் என்கிறார்.

கள்ளர் என்ற சொல்லுக்கு கரியவன், கர்க்கடகம், குரங்கு, அரசன், நண்டு, முசு, யானை என்று பல்வேறு பொருள்கள் உண்டு. சங்ககால இலக்கியங்களில் கள்வர் என்ற சொல் காணப்படவில்லை. மேலும் கள்வன் என்னும் சொல்லுக்கு திவாரக நிகண்டு கரியோன் என்று மட்டுமே பொருள் தருகிறது.பிங்கலந்தையும் இதையே கூறுகிறது. எனவே கள்வன்,கள்வர் என்னும் சொல் கருமை நிறம் கொண்டவர்களையே தொன்று தொட்டு குறிப்பிட்டு வருவது புலப்படுகிறது. கள்ளர் குலம் என்று அறியும் போது அரசன், மன்னவன் என்று பொருள் அடக்கம் பெரும். இதனை நச்சினார்க்கினியரின் சீவகசிந்தாமணியின் உரைநடை அரங்கேற்றுகிறது.

ஆரியர் தமிழரை கரியவர் என்று இருக்கு வேதத்தில் குறித்துள்ளனர். இந்திரனுக்கு மட்டுமே கரியவன் என்ற பெயர் உண்டு. மேலும் முக்குலத்தோர்களும் கருமை நிறம் கொண்டிருந்தமையால் மால் என்று அழைக்கப்பட்டனர். இதனால் தான் இந்திர குலத்தவர் கள்ளர் என்றும் அழைக்கப்பட்டனர்.

கள்ளர் என்னும் சொல் மிக உயர்ந்த சொல்லாகக் கருதி நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியுள்ளனர்.
கள்வர், கள்ளர் என்ற பெயருள்ள கடவுள்கள்
சிவபெருமான் - திருமால் (மால்) என்றும் உள்ளங்கவர் கள்வன் என்று என சிவபெருமானை சம்பந்தரும்

திருமாலை, கள்ள மாதவா கேசவா,
காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா,
வரி பொழி லாங்கந்தனுள் கள்வனார்,
கிடந்த வாறும் என திருமாலை திருமொழிப்பிரபதங்களில் ஆழ்வார்களும் குறிப்பிடுகின்றனர்

திருப்பதி வேங்கடாசலபதி பெருமாளின் மனைவி அலர்மேல்மங்கை திருவேங்கடத்தை ஆண்ட கள்ளர் இனத்து முனியத்தொண்டைமானின் மகளாவாள் ( திருமலை மான்மியம்)

சங்ககால மாமன்னன் புல்லி என்பான் வேங்கடத்தை ஆண்டவன். இவனது சிறப்புபெயர் கள்வர் கோமான்
கள்வர் கள்வன் பெரும் பிடுகு முத்தரையன் 9 செந்தலைக் கல்வெட்டு

திருக்காட்டுப்பள்ளி-செந்தலைதூண் கல்வெட்டு
வல்லக்கோன், தஞ்சைக்கோன் ஸ்ரீ கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன். எனவும் குறிப்பிடுகின்றன.

 வினைநவில் யானை விறற்போர்க் தொண்டையர்
இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்
டோங்கு வெள்ளருவி வேங்கடத் தும்பர் (அகம்.)
என வேங்கடமலைப்பகுதியை ஆண்ட தொண்டைமானைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.

 கள்வர் பெருமகன் - தென்னன்
 கள்வர் கோமான் தென்னவன்
என அகநானூறு பாண்டிய மா மன்னனையும்

சேர, சோழ, பாண்டிய மா மன்னர்களும், தொண்டைமான், புல்லி, முத்தரையர் போன்ற மன்னர்களும் பழந்தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் கள்வர், கள்ளர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

இவனென் னலங்கவர்ந்த கள்வ னிவனெனது
நெஞ்ச நிறையழித்த கள்வனென். . “
என முத்தொள்ளாயிரம் சேர மா மானைப் பற்றியும்

மடல்சூழ்ந்த தார்நம்பி யிடங்கழிக்கும்(சுந்தரர் திருத்தொண்டர்தொகை)

கோனாட்டுக் கொடும்பாளூர் வேளிர் குலத்து அரசன்
ஆதித்தன் புகழ் மரபிற்குடி முதலோன்(சேக்கிழார்-பெரியபுராணம் பக்.491)

 கொங்கிற் கனகமணிந்த ஆதித்தன் குல முதலோன். .
இருக்குவேள் மன்ன இடங்கழியே”(நம்பியாண்டார் நம்பி-திருவந்தாதி
இருக்குவேளிர் குலத்தலைவர் . இடங்கழியார். . பொன்வேய்ந்த ஆதித்தன்
மரபோர் (சேக்கிழார் திருத்தொண்டர் புராண சாரம் பக்.52)
என சுந்தரர்,சேக்கிழார், நம்பியாண்டார் நம்பிஅடிகள் சோழர்கள் கள்ளர்கள் எனவும்

“ களப ராஜராஜன்” 
 கள்வன் ராஜராஜன்
என மெய்க்கீர்த்தி கல்வெட்டு இராண்டாம் இராசராச சோழனை களபர்-கள்வன் எனவும்

“ கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் (அகம்.61)

 புடையலங் கழற்காற் புல்லி குன்றத்து (அகம்.)

 பொய்யா நல்லிசை மாவண் புல்லி (அகம்.359)

 நெடுமொழிப் புல்லி (அகம்.)

புல்லி நன்னாட்டும்பர்”(அகம்.)

 கடுமான் புல்லிய காடிறந்தோரே(நற்றிணை)
என மாமூலனார் வேங்கடமலைப்பகுதியை ஆண்ட புல்லியைப்பற்றியும்

 புல்லி வியன்றலை நன்னாட்டு வேங்கடம்
 மாஅல்யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடம்
என கல்லாடனார் வேங்கடமலைப்பகுதியை ஆண்ட புல்லியைப் பற்றியும் குறிப்பிடுகின்றன. 

கள்ளர்குலமும் அரசமரபுகளும்.


கரிகால் சோழன்
Picture

தமிழக வரலாற்றில் மிகத்தொன்மையான காலம் முதற்கொண்டு சிறப்புற்று வாழும் குடிகளுள் கள்ளர்குடி தனிச் சிறப்புடையதாகும். இக்குடியினர் தம் இயற்பெயருடன் சுமார் ஈராயிரம் பட்டப் பெயரையும் கொண்டு விழங்குகின்றனர். உலக வரலாற்றில் ஈராயிரத்திற்கு மேல் பட்டப்பெயருள்ள (குடும்பப்பெயருள்ள) எந்த சமுதாயமோ குடிகளோ இல்லை என்பதும் வரலாறு. இவ்வினப் பெருமக்கள் தமிழகத்தை ஆண்ட பல்வேறு அரச குடும்ப தோற்றல்களாகவும், தொடர் புள்ளவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதற்கு முக்குலமன்னர்கள் கால கல்வெட்டுகள் காட்டுகின்றன. இன்றைய நிலையில் பல பட்டங்கள் எதுவித மற்றமும் இன்றியும் சில பட்டங்கள்                                                                          சிறிது மாற்றத்தோடும் கானப்படுகின்றன. 
சோழ மன்னர்கள் தம் ஆட்சிக்குற்பட்டிருந்த சிற்றரசர்களைத் தம் அரசியலில் உயரதிகாரிகளாக கொண்டிருந்தனர், அவர்களே கல்வெட்டுகளில் கையொப்பமும் மேலொப்பமும் இட்டுள்ளனர். சங்ககாலம் முதற்கொண்டு மிகப் பிற்காலம் வரையில் கள்ளர் மரபினர் நாட்டாச்சியோடு தொடர்புடன் விளங்கியுள்ளனர். மேலும் சோழர், சேரர், பாண்டியர், மலையர், மழவர், பழுவேட்டரையர், சேதிராயர், வாணாதிராயர், பேசாளர், சாளுக்கியர், கங்கர், முத்தரையர், பல்லவர், அதியமார் முதலிய கள்ளர் குலத்தவர் நாடாண்டுள்ளனர் என்பதும் வரலாறு.

சக்கரவர்த்திகளும், மாமனர்களும், மன்னர்களும் தம் கீழ்ப்பணியாற்றிய அதிகாரிகள், வீரர்கள், சான்றோர்களுக்கு அவர்களின் அருஞ்செயல்களைப் பாராட்டி அவர்களுக்கு உயரிய பட்டங்களை வழங்குவது மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டது. பெரியபுராண ஆசிரியர் சேக்கிழார்க்கு உத்தம சோழப் பல்லவராயன் என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

முதலாம் பராந்தகனுக்கு உதவியாக இருந்த கள்ளர் குல கங்க மன்னன் இரண்டாம் பிரிதிவிபதிக்கு அவன் வாணர்களின் தலைவன் என்பதால் வாணாதிராயன் என்னும் வீர விருது வழங்கப்பட்டது. இவ்வாரே தென்னவன் மூவேந்த வேளான், இராசராசக் காடவராயன், ஆளப்பிறந்தான் முதலான பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. சோழமண்டலத்தில் காணப்பட்ட கல்வெட்டுகளில் ஈழத்தரையர், ஈழமுண்டார், கொல்லமுண்டார், கொல்லத்தரையர், கொங்கரையர், கங்கநாட்டார், சோழகங்கநாட்டார், காலிங்கராயர், கடாரத்தேவர், கடாரத்தலைவர், கடாரம்தாங்கியார், மண்ணையார், சிங்களாந்தான், சிங்களராயர், சிங்களேந்தியார், கேளராயர், கேரளாந்தகன் போன்ற பட்டங்கள் போர் வெற்றிகளை குறித்து வழங்கப்பட்டதாக தெரிகிறது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கோவலூர் என்ற இன்றைய திருக்கோவலூர் மலையமான் என்னும் கள்ளர் குல மன்னர்களால் ஆளப்பட்டது. திருமுடிக்காரி இக்குடியில் பிறந்த வள்ளலாவான். கோவலூரை ஆண்டவர்கள் கோவலராயன் என்றுமழைக்கப்பட்டனர். இக்குடியினரின் மருவிய பட்டப்பெயரே இன்று கோபலர் என்று அழைக்கப்படுகிறது.

இன்றைய தர்மபுரி சங்ககாலத்தில் தகடூராக இருந்தது. தடூரை ஆண்டவர்கள் அதியமான் என்னும் கள்ளர் குல மன்னர்களாவர். அதியமான் என்னும்பட்டம் மருவி அதியமார் என்றும் இப்போது அழைக்கப்படுகிறது.

வடக்கே பாலாற்றுக்கரையில் ஆண்டோர் வாணாதிராயர் என்னும் கள்ளர் குல மன்னர்களாவர். இங்கு வாணாதிராயன் பட்டினம் என்றோர் ஊரும் உண்டு. இவர்கள்பாலியார், பால்நாட்டார், பாலாண்டார், மாவாலியார் என்னும் பட்டங்களிலும் அழைக்கப்படுகின்றனர்.

இது போன்று திருமுனைப்பாடியை ஆண்டவர்கள் முனையர் என்ற பட்டமும், சேதிநாட்டை ஆண்டவர்கள் சேதிராயர் என்ற பட்டமும், மழவ நாட்டை கொண்டவர்கள் மழவராயர் என்ற பட்டமுடைய கள்ளர்கள் என்பது தெளிவாகிறது.

புதுக்கோட்டை பகுதியிலுள்ள கொடும்பாளூரை ஆண்டோர் கள்ளர்குல இருக்கு வேளீர்களாவர். இவர்கள் சோழர்களுக்கு பெண் கொடுக்கும் உரிமை கொண்டோராவர். கொடும்பாளூரை கல்வெட்டுக்கள் கொடும்பை எனக் குறிக்கின்றன. கொடும்பைராயர் என்ற பட்டம் இன்று மருவி கெடும்புராயர், கொடும்பாளூர்ராயர், கொடும்பூராரென்றும் வழங்கி வருகின்றன. மேலும் இருங்கோ வேளார் என்னும் பெயரும் இன்று இருங்களார் என்ற பட்டமாக மருவி விட்டது. அண்ணவாயில், பூவனைக்குடி முதலிய இடங்களும் கொடும்பாளூரைச் சேர்ந்தபகுதியாகும், இப் பகுதி கள்ளர் குலத்தவர்களுக்கு அண்ணவாசல்ராயர் என்ற பட்டமும், பூவனைக்குடி கள்ளர்களின் பட்டமாகிய பூவனையரையர் என்ற பட்டம் இன்று பூனையர் என்று திரிந்து வழங்குகிறது. பூவனைக்குடியில் பூதிகளறி அமரூன்றி என்னும் முத்தரைய மன்னன் இங்கு புட்பவனேசுரருக்கு ஒரு கோயிலைக் குடைந்திருக்கிறான். கொடும்பாளூர் குறுநில மன்னன் பராந்தகன் சிறிய வேளர் சுந்தரசோழன் காலத்தில் ஈலத்தை வென்று அப்போரிலேயே உயிநீத்த பெருமையும் இருக்கு வேளீர் பரம்பரையையே சாரும்.

"வில்லவர்"
உழு தொழில் தோன்றுமுன்னரே பல்வேறு இனக் குழுக்கள் இருந்தன. பெருங்கற்காலத்தில் அதாவது சங்க காலத்திற்கு சற்று முந்தைய காலத்தில் மனிதன் வேட்டையாடுவதற்கு வில் அம்புகளைப் பயன்படுத்தத் தொடங்கினான்.அப்போது உழவுத் தொழிலே இல்லை.அப்போது அறியப்பட்டவர்கள் வேட்டையாடல் தொழில் செய்தோரே.

தமிழகத்தின் மிகப் பழமை வாய்ந்த குடியினராக (கள்ளர்)  "வில்லவர்" அல்லது வில்லாளிகள் என்ற குடியினர் மலைப் பகுதிகளிலும், காடுகளிலும் வாழ்ந்து வேட்டையாடல் வாழ்க்கை நடத்தினார்கள். இக் குடியினருக்குத் தலைவராக யார் விளங்கமுடியும்?அவர் குடியில் ஒருவர் தான் தலைவராக இருந்திருப்பார்.இவர்கள் தான் அரச குலத்தின் முன்னோடிகளாக இருக்கமுடியும்.

அரசர்கள் போர்க்குடியினருக்கு விளை நிலங்களை எதற்காக வழங்கினார்கள்? மழவர்,மறவர் வழித் தோன்றல்கள் தங்கள் வீரத்திற்குப் பரிசாகப் பெற்ற நிலங்களே அவை. மழவர்,கள்ளர்,மறவர் போன்றோர் சோழர்,பாண்டியர் படைகளில் பிரதான இடம் வகித்ததால் தான் பிற நாட்டரசர்களை வெல்லுமளவிற்கு வேந்தர்கள் வலிமையுடன் இருந்தனர். கங்கை கொண்டான்,கடாரம் கொண்டான் என தமது பெருமைகளை தம்பட்டம் அடித்துகொள்ள முடிந்தது எதனால்? போர்க்குடியினரான, மறவர்,மழவர் வழித்தோன்றல்களான வீரர்களால்தான். அதனால்தான் போர்க்குடியினர் வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றனர்.

இப்பொழுது கள்ளர்கள் பெருந்தொகையினராய் இருந்து வரும் காவிரி நாடே சோழர்கள்  ஆட்சி புரிந்த நாடு. சோழர்கள் சோணாடேயன்றி வேறு நாடுகளையும் ஓரொருகாலத்தில் வென்று ஆண்டிருக்கின்றனர். சோழரிற் சிலர்க்கு ‘கோனேரிமேல் கொண்டான்’ என்னும் பட்டம் வழங்கியிருக்கிறது, இப்பெயர் தரித்திருந்தோரும் , கொங்கு நாட்டையும் ஆட்சி புரிந்தோருமான மூன்றாம் குரோத்துங்க சோழனும், வீர சோழனும் முறையே வெங்கால நாட்டுக் கம்மாளர்க்கச் செய்திருக்கும் தீர்ப்பு ஒன்றும், கருவூர்க் கோயிற் பணியாளர்க்கு இறையிலி நிலம் விட்டிருப்பதைக் குறிப்பது ஒன்றுமாக இரண்டு கல்வெட்டுக்கள் கருவூர் பசுபதீச்சுரர் கோயிலில் வெட்டப்பட்டுள்ளன. அவை பின் வருவன:

“திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீகோனேரிமேல் கொண்டான் வெங்கால நாட்டுக் கண்மாளர்க்கு 15-வது ஆடி மாதம் முதல் தங்களுக்கு நன்மை தின்மைகளுக்கு இரட்டைச் சங்கும் ஊதி, பேரிகை உள்ளிட்டவும் கொட்டுவித்துக் கொள்ளவும், தாங்கள் புறப்படவேண்டும் இடங்களுக்குப் பாதரஷை சேர்த்துக் கொள்ளவும், தங்கள் வீடுகளுக்குச் சாந்து இட்டுக்கொள்ளவும் சொன்னோம். இப்படிக்கு இவிவோலை பிடிபாடாகக் கொண்டு சந்திராதித்தவரை செல்லத் தக்கதாகத் தங்களுக்கு வேண்டின இடங்களிலே கல்லிலும், செம்பிலும் வெட்டிக் கொள்க. இவை விழுப்பாதராயன் எழுத்து.”

‘’கோனேரி மேல்கொண்டான் கருவூர்த் திருவானிலை ஆளுடையார் கோயில் தேவர் கன்மிகளுக்கு — இந்நாயனார் கோயிலுக்கு நம்பெயரால் இயற்றின வீரசோழன் திருமடவளாகத்தில் குடியிருந்த தவசியர்க்கும், சிவப்பிராமணர்கும், தேவரடியார்க்கும், உவச்சர்க்கும், பலபணி நிமந்தக்காரர்க்கும் சீவனசேஷமாகத் தென்கரை ஆந்தனூரான வீரசோழ நல்லூர் கொடுத்து இவ்வூரால் வந்த இறையும் எலவையும் உகவையும் கொள்ளப்பெறாதோமாக விட்டு மற்றுள்ள குடிமைப்பாடும் எப்பேர்ப்பட்டதும் இந்நாயனார் கோயிலுக்குச் செய்து இவ்வூர் இப்படி சந்திராதித்த வரை அநுபவிப்பார்களாக நம்மோலைக் கொடுத்தோம். இப்படி செம்பிலும் சிலையிலும் வெட்டிக்கொள்க. இவை விலாடத்தரையன் எழுத்து

இவற்றிலிருந்து தோன்றும் பிற உண்மைகள் ஒருபுறம் நிற்க. கோனேரி மேல்கொண்டான் என்னும் பெயரே இங்கு வேண்டுவது. பெயரினைக் குறித்துத் தென்னிந்தியசாசன புத்தகம் இரண்டாவது தொகுதி, முதற்பகுதி 21-ம் சாசனத்தில் சாசன பரிசோதகர் பின் வருமாறு குறித்திருக்கின்றனர்.:

இப்பெயர் ஒரு விடுகதை பொன்றே இருந்து வந்திருக்கிறது. பலர் பலவிதமாக இதனை எழுதியுள்ளார்கள். கோனேரின்மை கொண்டான் என்பதற்கு அரசர்க்குள் ஒப்பிரல்லாதவன் என்று பொருள்கொள்ளலாம். கோனேரி எனப் பின்னர் மருவியிருக்கிற தாகத் தெரிகிறது, வீரசோழனும், குலோத்துங்க சோழதேவனும் கோனேரிமேல்கொண்டான் எனவும், கோனேரிமேங்கொண்டான் எனவும் பட்டம் பூண்டிருக்கின்றனர். ஒரு நாணயத்தில் கோனேரி ராயன் என்று எழுதப்பட்டிருக்கிறது. கோனேரின்மை கொண்டான் என்னும் பட்டம் சோழவரசர் ராஜராஜ தேவராலும் கொள்ளப் பட்டிருக்கிறது. சுந்தர பாண்டியனுக்கும் இப்பட்டமுண்டு. வீரபாண்டியன், குலசேகர தேவன் இவர்களுக்கும் இப்பட்டத்தையே கொண்டவர்கள்

இப்பெயர் இங்ஙனம் திரிந்து காணப்படினும், கோனேரி மேல்கொண்டான் என்பதே திருத்தமுள்ளதாக இப்பொழுது கொள்ளற்பாலது. திருப்பதிமலையிலுள்ள ஒரு தீர்த்தம் கோனேரி என்னும் பாலது. திருப்பதிமலையிலுள்ள ஒரு தீர்தம் கோனேரி என்னும் பெயரதாதலும், கோனேரிராஜபுரம் எனச் சில ஊர்களிருத்தலும், கோனேரி என்று பலர் பெயர் வைத்துக் கொண்டிருத்தலும் இவ்வுண்மையை விளக்குவனவாகும். குலசேகர ஆழ்வார் காலத்திலேயே கோனேரி என வழங்கியிருப்பது, அவர், ‘கோனேரி  வாழும் குருகாய்ப் பிறப்பேனே’ என்று பாடுவதால் அறியலாகும்.  இவ்வாற்றால் கோனேரி, மேல்கொண்டான் என்னும் இரு பெயர்களை இணைந்து ஒரு பட்டமாக வழங்கியிருப்பது புலனாகும். இப்பெயர்களில் யாதேனும் யாருக்காவது இப்பொழுது பட்டப்பெயராக வழங்குகின்றதா என்பதே கண்டறிய வேண்டுவது.

கள்ளருக்குள் வழங்கும் பல்வகையான பட்டப் பெயர்களில் மேல் கொண்டார் என்பதும் ஒன்று. இப்பட்ட முடையார் செங்கிப்பட்டி முதலிய இடங்களில் இருக்கின்றனர். இன்னோர் பரம்பரையாக மிக்க மேன்மை யுடையராய் இருந்து வந்திருக்கின்றனர். மதுக்கூர்ச் சமீன்றாரின் மாப்பிள்ளையும் கூனம் பட்டியின் அதிபருமாகிய திரூவாளர் S. குமாரசாமி மேல்கொண்டார் அவர்களை இதற்குச் சான்றாகக் குறிப்பிடுதல் பொருந்தும். கோனேரி என்னும் பெயரும் கள்ளர்களில் பலர் தரித்து வந்திருக்கின்றனர் இவகைளிலிருந்து. சோழர்    பலர்க்கு வழங்கிய மேல்கொண்டான் என்னும் பெயர் அவர் வழியினர்க்குப் பட்டமாக இருந்துவருகிறதென்றும், அவர்கள் பல குடும்பங்களாகப் பிரிந்து தங்கள் நாடாட்சியை இழந்து பிற்காலத்திலே சோழர் குடியிற் றேன்றினோ ரென்னும் உண்மை மறக்கப்பட்டிருக்கிறதென்றும் துணியலாகும்.

கள்ளருக்குள் வழங்கும் பட்டங்களில் சோழங்கர் அல்லது சோழங்க தேவர் என்பதும் ஒன்று, இப்பெயரின் வரலாற்றை ஆராயும் பொழுது சோழ சம்பந்தம் பெறப்படுகிறது. சோழ மன்னர்கள் ஓரொருகால் தாம் வென்று கைப்பற்றிய நாடுகளில் தம் கிளைஞரைப் பிரதிநிதிகளாக நியமித்து, அவர்கட்கு வெவ்வேறு பட்டங்கள் கொடுத்திருக்கின்றனர் எனத் தெரிகிறது. சோழ பாண்டியன், சோழ கேரளன், சோழபல்லவன் முதலியன அங்ஙனம் உண்டாய பட்டங்களாகும். தென்தனிந்திய சாசன புத்தகம் மூன்றாவது தொகுதி, முதற் பகுதி 59-ம் சாசனத்தில் வந்துள்ள பட்டங்களில் ‘சோழங்கன்’ என்பதும் ஒன்று, ‘தன்றிருத்தம்பியர் தம்முள்–மதுராந்தகனைச் சோழகங்கனென்றும், மணிமுடிசூட்டி’ எனக் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து சோழமன்னன் ஒருவன் தம்பி சோழகங்கன்   சோழங்கன் மருவுவது மிக எளிதே. இப்பட்டமுடைய கள்ளர் குல மக்கள் துண்டுராயன்பாடி, அந்தலை முதலிய இடங்களில் இருக்கின்றனர். இவரெல்லாம் தொன்றுதொட்டுப் பெருமை வாய்ந்துள்ள குடும்பத்தினர்களாவர். இன்னோர் கோட்டை கட்டியும் ஆட்சி புரிந்திருக்கின்றனர். அது பின் கூறப்படும்  சாசனங்களில் ‘சோழகோன்’ என ஒரு பட்டம் வந்துள்ளது. இது சோழகன் எனத்திரிந்து பன்மையில் சோழகர் என்றாகி இவ்வகுப்பினர்க்கு வழங்குகிறது.

கள்ளர்களில் நாட்டாள்வார் அல்லது நாடாள்வார் என்னும் பட்டந்தரித்தோர் பல இடங்களில் பெருந்தொகையினராக இருக்கின்றனர். கோனாடு, கானாடுகளின் பிரிவுகளை ‘அரையர் ‘ ‘நாடாள்வார்’ என்னும் பட்டமுடையார் ஆட்சிபுரிந்த செய்தி கல்வெட்டுகளில் வெளியாவது முன்பே காட்டப்பட்டது. நாடாள்வார் என்னும் இப்பெயர் முதல் குலோத்ததுங்கன் மகனாகிய விக்கிரம சோழனுக்கு வழங்கியுள்ளது. குருபரம்பரைப் பிரபந்தம் என்னும் தமிழ்ச் செய்யுள் நூலில், இராமாநுசர் சரிதையில்,

‘சீராரு மரங்கத்துச் சிலபகல்கண் மன்னவந்நாட்
பாராளு மன்னவன் பாகவத ரிடத்திலென்றும்
ஆராத காதலனாம் அகளங்க நாடாள்வான்
ஏராரும் வைகுந்த நாடாள வேகினான் (794)
என்று கூறப்படுதல் காண்க. (செந்தமிழ் தொகுதி 3, பாக்கம் 347-351)

விக்கிரமனுக்குப் பின்னர் ஸ்ரீரங்கத்தில் சிற்றரசர்களாயிருந்தோர்க்கும் இப்பெயர் வழங்கிய செய்தி கல்வெட்டக்களால் வெளியாகின்றது. அது பின்பு காட்டப்படும். இவைகளிலிருந்து முடியுடை வேந்தராகிய சோழர்க்கு வழங்கிய நாடாள்வார் என்னும் பெயர் அவ்வழியினர்ககும் ஆட்சி சுருங்கிய பிற்காலத்தும் வழங்கி வந்திருப்பது புலனாம். இவ்வாறே மற்றும் பல பட்டங்கள் சோழர்க் குரியன கள்ளரிடத்திற் காணப்படுகின்றன

கள்ளர் குல பட்டங்களும், சோழ மன்னர்களின் சிறப்புப் பட்டங்களும், ஒரு பார்வை.

இராசராச சோழன்
Pictureஅரசு உருவாக்கத்தில் தன் நாட்டு எல்லையை வரையறுக்கவும் விரிவுபடுத்தவும், விரிவுற்றதை பாதுகாக்கவும் போர்கள் எழுந்தன. போரில் பங்கேற்பதும், மார்பில் புண்பட்டு மடிவதும் மாட்சிமைக்குரிய வாழ்வாக மக்கள் கருதினர். இக் காலத்தை வீரநிலைக்காலம் என்பர். இத்தகு வீரநிலைக் கால வாழ்வில் பங்கேற்றுத் தன்னலம் பாராது தாய்மண் காத்த மறவர்களுக்கு மன்னர்கள் வழங்கிய வீரநிலைப் பட்டங்கள் ஏராளம்.

கண்டராதித்தசோழன், அரிஞ்சயசோழன், சுந்தரசோழன், உத்தமசோழன்,இராசராசசோழன், இராசேந்திரசோழன்,இரண்டாம் இராசேந்திரசோழன், வீரராசேந்திரசோழன், அதிராசேந்திரசோழன், குலோத்துங்க சோழன் ஆகியோர் தேவர் என்னும் கள்ளர் பட்டங்களை பூண்டனர்.

முதலாம் இராசராசசோழன் இராசகண்டியன், உய்யக்கொண்டான், கேரளாந்தகன், சிங்களாந்தகன் என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.

முதலாம் இராசேந்திரசோழன் சீனத்தரையன், சேனாதி, சேனாதிபதி என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.

இராசாதிராசசோழன் செயங்கொண்டான், சயங்கொண்டான், சேங்கொண்டான், போரிற்  கொளுத்தி, போரைக்கொளுத்தி என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.

குலோத்துங்கசோழன் ஈழத்தரையன், ஈழங்கொண்டான், கோட்டை சுருட்டி, கோட்டைமீட்டான், முடிகொண்டான் என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.

இரண்டாம் இராசேந்திரசோழன் உத்த்ங்கொண்டார், உத்தமுண்டார் என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.

இரண்டாம் இராசேந்திரசோழனின் மகன் சோழகன்ன குச்சிராயன் என்னும் கள்ளர் பட்டத்தை கொண்டான்.

மதுராந்தக சோழன் சோழங்கர் என்னும் கள்ளர் பட்டத்தை கொண்டான்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் சோழ கேரள தேவன், சோழபாண்டியன், கோனேரி மேற்கொண்டான் என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டிருந்தான்

விக்கிரம சோழன் கோனேரி மேற்கொண்டான் என்னும் கள்ளர் பட்டத்தை கொண்டிருந்தான்

இராசமகேந்திர சோழன் கொல்லத்தரையன் என்னும் கள்ளர் பட்டத்தை கொண்டிருந்தான்

முதலாம் இராசேந்திரன் தெற்காசிய நாடுகளை கைப்பற்றிய போது நிகழுற்ற போரில் மண்ணைக் கடக்கத்தை வென்று கடும் போர் புரிந்தவர்கட்கு மண்ணையார் என்ற பட்டத்தையும், இலங்கையை வெல்ல போர் புரிந்தவர்கட்கு முடிகொண்டார், ஈழம்கொண்டார் என்றும், மலேயாவின் மேற்கரையில் உள்ள கடாரத்தை வென்றோருக்கு கடாரம்கொண்டார், கடாரம்தாங்கியார், கடாரத்தலைவர், கடாரத்தரையர் என்றும், ஸ்ரீவிசயம் என்ற சுமத்திராவை வென்றதற்காக விசயதேவர், விசயராயர் என்றும், நிக்கோபார் என்ற மாணக்கவாரம் தீவை வென்றதற்காக மாணக்கவாரர் என்றும் சுமத்திரா தீவின் பன்னையூரை வென்றதனால் பன்னையார் என்றும், வணிகத்தின் பொருட்டு சீனநாட்டிற்கு அனுப்பியோருக்கு சீனத்தரையரென்றும் பட்டங்களும் வழங்கப்பட்டது. இலங்கையில் சோழ அரசின் சார்பாக கண்டி மாநகர் என்னும் தலைநகர் அமைத்து அரசாண்ட கண்டியூர் அரசனுக்கு ராசகண்டியன் என்னும் பட்டமும் வழங்கி, அதே ராசகண்டியன் என்ற பட்டத்தை தனது சிறப்புப் பட்டமாக இராசராச சோழன் தனுக்கு சூட்டிக் கொண்டது பெரும்வியப்புக்குறியது

கள்ளர் இனத்தின் வீர வரலாறு

முக்குல மன்னர்கள்
Picture


இன்றைய சூழலில் கள்ளர் என்பது கள்ளர், கள்வர் இரண்டும் கலந்து திருடன் என்று ஒரு பொருள் கொள்ள நினைப்பது தவறாகும். பொதுவாக நாற்றம் என்ற சொல் இன்றைய சூழலில் துர்நாற்றம், விரும்பத்தகாத ஒரு மணம் என்றே அறியப்படுகிறது. ஆனால் நாற்றம் என்றால் நறுமணத்தை மட்டுமே குறிக்கும் என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? 

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் ஸ்பென்சர்வெல்மனிதனின் பயனம் என்ற ஆய்வின் முடிவுகள் தரும் தகவலின் படி கள்ளரினத்தில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரலாற்று தொடாபு உண்டு என்றும், வேறு எந்த சமூகத்திற்கும் இவ்வித குடும்ப வரலாற்று தொடர்புகள் இல்லை என்றும், நாகரீக இனங்களில் 65000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் இனம் கள்ளர் இனமென்றும், இன்று உலகலவில் பல்வேறு நாட்டு மானிடவியல் அறிஞர்களும் ஆய்வு செய்யும் இனமும் கள்ளர் இனம் என்றும் கூறுகிறார். எந்த ஒரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாடுகளையும் அறிந்து உரையாடி உறவு கொண்டுள்ளதோ அது தான் ஜீவனுள்ள உயிருள்ள இனமாகும். இல்லை எனில் அடையாலமற்ற மாண்ட இனமாகிவிடும் என்றும் கூறுகிறார்.
  
உலக வரலாற்றில் தொடர்ந்து 433 ஆண்டுகள் (கி.பி 846 முதல் கி.பி. 1279) ஆண்ட இனமும் கள்ளரினமே. கள்ளரின நாகரீகம் மிகவும் பழைமையானது என்று வரலாறு ஏற்றுக்கொள்கிறது.   
அரசு உருவாக்கத்தில் தன் நாட்டு எல்லையை வரையறுக்கவும் விரிவுபடுத்தவும், விரிவுற்றதை பாதுகாக்கவும் போர்கள் எழுந்தன. போரில் பங்கேற்பதும், மார்பில் புண்பட்டு மடிவதும் மாட்சிமைக்குரிய வாழ்வாக மக்கள் கருதினர். இக் காலத்தை வீரநிலைக்காலம் என்பர். இத்தகு வீரநிலைக் கால வாழ்வில் பங்கேற்றுத் தன்னலம் பாராது தாய்மண் காத்த மறவர்களுக்கு மன்னர்கள் வழங்கிய வீரநிலைப் பட்டங்கள் ஏராளம்.

தாய்மண் காக்க தன் உதிரத்தை கொட்டிய கள்ளர் குல மறவர்க்கு உதிரப்பற்று என்ற வரி நீக்கிய நிலக்கொடையை முதலாம் இராசராச சோழன் வழங்கிப் போற்றியதைப் பெருவுடையார் கோயில் கல்வெட்டு கண்முன்னே காட்சிப்படுத்துகிறது. 

சங்ககால கள்ளர் குல மறவர்களின் போர் முறைகளும் பெயர்களும்
சங்ககாலத்தில் ஒவ்வொருவகை போருக்கும் வெவ்வேறு பெயர்கள் கொடுத்திருந்தனர் அவையாவன.
1. பகையரசன் நாட்டிற் சென்று அந்நாட்டு ஆனிரைகளைக் கவர்ந்து வருதல்.     
      வெட்சிப்போர்
2. பகையரசன் கவ்ர்ந்த ஆனிரைகளை மீட்பத்ற்காக செய்யும் போர். 
      கரந்தைப்போர்
3. நாட்டை பிடிப்பதற்காக படை எடுத்து செய்யும் போர். 
      வஞ்சிப்போர்
4. படை எடுத்து வரும் அரசனை எதிர்த்துச் செய்யும் போர். 
      தும்பைப்போர்
5. பகை அரசனின் கோட்டை மதிலை வளைத்து முற்றுகையிடும் போர். 
      உழிஞைப்போர்
6. கோட்டை மதிலுக்குள் இருந்து முற்றுகையிட்டவனுடன் செய்யும் போர்.     
      நொச்சிப்போர்

கள்ளர்களின் கிளைப்பிரிவுகள்
01. மாகாணக்கள்ளர்
02. கிளைவழிக்கள்ளர்
03. தஞ்சைநாட்டுக்கள்ளர்
04. அம்புநாட்டுக்கள்ளர்
05. ஈசநாட்டுக்கள்ளர் 
06. செங்களநாட்டுக்கள்ளர் 
07. வளநாட்டுக்கள்ளர்
08. பிரம்புநாட்டுக்கள்ளர்
09. மீய்செங்கிளிநாட்டுக்கள்ளர் 
10. நாலுநாட்டுக்கள்ளர்
11. ஐந்துநாட்டுக்கள்ளர்
12. ஏழுநாட்டுக்கள்ளர்
13. பாண்டிநாட்டுக்கள்ளர்
14. சேருவநாட்டுக்கள்ளர்
15. அம்பலநாட்டுக்கள்ளர்
16. புதுக்கோட்டைக்கள்ளர்
17. காந்தர்வகோட்டைக்கள்ளர் 
18. பிரமலைக்கள்ளர்

பாரதத்தையும் கடல் கடந்த நாடுகளையும் கட்டியாண்ட கள்ளர் இனத்தின் வீர வரலாறு
யார் இந்த கள்ளர்குல மறவர்கள்?
சங்க இலக்கியத்துல் சங்கமித்து
கல்வியில் பண்பட்டு அறிவியலில் கரைந்து
குல குருதியில் வளர்ந்தவர்கள் கள்ளர்குல மறவர்கள்.
தங்கள் உதிரத்தையே வியர்வையாக்கி இராச்சியங்களை உருவாக்கி நாட்டுக்கு உழைத்தவர்கள். வரலாற்றால் ரசிக்கப்பட்டவர்கள். வாழ்க்கையை ரசித்தவர்கள் அல்ல. 
உணவை மறந்து, உறக்கத்தை இழந்து இழப்பதற்கு ஏதுமின்றி இறந்தவர்கள், சிம்மாசனத்தை தலை நிமிர்ந்து பார்ததுமில்லை, சிம்மாசனங்களும் இவர்கள் இன்றி தலை நிமிர்ந்து நின்றதுமில்லை. இராச்சியங்களை உருவாக்கியவர்கள், உதிரப்பற்று வரி நீக்கம் பெற்றவர்கள். இருப்புகளால் பேசப்பட்டவர்களும் இல்லை, இழப்புகளால் இன்றும் அறியப்படுபவர்கள். அறம்கண்ட சிபியும், மனுகண்ட சோழனும், நெறிகண்ட செம்பியனும், காவிரிக்கு கரை வார்த்த கரிகாலனும், புவிதனில் பெருங்கோயில் படைத்த ராசராசனும் கள்ளர் குல மரபு வழி வந்தவர்களே.

வம்ச தோன்றலின் முடிவில்லா சுகமான நெடும் பயணம்
வரலாற்றுல் சிபி சக்கரவர்த்தியில் வித்தாகி
முசுகுந்தனில் விதையாகி 
காந்தனில் பதிந்து
செம்பியனில் முளை விட்டு 
மநுவில் வளர்ந்து 
கரிகாலனில் உயர்ந்து 
சென்னியில் திளைத்து 
கோப்பெருஞ்சோழனில் படர்ந்து 
கோச்செங்கணானில் அரும்பாகி 
விசயாலயனில் மொட்டாகி 
ஆதித்தனில் முகையாகி 
பராந்தகனில் மலராகி 
கண்டராதித்தனில் அலராகி 
அரிஞ்சயனில் வீயாகி 
உத்தமனில் செம்மலாகி 
இராசராசனில் காயாகி 
இராசேந்திரனில் கணியாகி வளர்ந்த குலமே கள்ளர் குலம்
என்றும் நம் இதயத்தில் இணந்தது வளர்வதும் கள்ளர் இனமே!

கொற்றவர்கள் கற்றவர்களைப் போற்றிய கள்ளர் குல கோட்பாடுகள்
மகளாய் பிறந்து மணைவியாய் விளங்கி தாயாக உயர்ந்து, முடிவில் இறையாகிப் போற்றப்படுகிறவள் பெண்.
மகனை பெற்றளித்தல் என் கடமை - சங்க கால கள்ளர் குல தாய்
சான்றோனாக்குதல் என் கடமை - தந்தை
நன்னடை நல்கல் என் கடமை - வேந்தன்
போரில் களிறு எறிந்து பெயர்தல் என் கடமை - மைந்தன்.
இனத்தையும் குலத்தையும் பெருமைப்படுத்தல் என் கடமை - போர் மறவன்
பிறந்த வீட்டை காத்தல் என் கடமை - தலைவன் 
புகுந்த வீட்டை ஒளியாக்கல் என் கடமை - தலைவி
நிழலளித்த பெற்றோரை காத்தல் என் கடமை - தலைமகன்
கல்வி அளித்த குருவை நினைவில் கொள்ளல் என் கடமை - சான்றோன்
மக்களை பெற்றுத்தந்த மனைவியை மகிழ்வித்தல் என் கடமை - கணவன்
குலம் தலைக்க வந்த மக்களை வளர்த்திடல் எம் கடமை - கள்ளர் குல மக்கள்

கள்ளர் குல திருமண கோட்பாடுகள்
சூரிய மரபினர் முற்காலத்தில் இரத்தினங்க்களினால் மணவரை அமைத்து வாழை, கமுகு, கொடி, மகரதோரணம், பூரணகும்பம், முதலியவற்றால் அலங்காரம் செய்து ஆயிரப்பெருந்த்கழி என்னுந் திருவிளக்கேற்றி ஒரு புறம் யானையும், ஒரு புறம் குதிரையும், ஒரு புறம் மயிலும், ஒரு புறம் கும்பமும் அமைத்து பூசனைசெய்து முரசு, மத்தளம், உடுக்கை போன்ற தோற்கருவிகள், நாதசுரம், புல்லாங்குழல், சங்கு முதலிய துளைக்கருவிகள், தாளம் முதலிய கஞ்சக்கருவிகள், வீணை முதலிய நரம்புக்கருவிகள் வாத்தியங்கள் முழங்க மணமக்களை மங்கலநீராட்டி பட்டு, பீதாம்பரம், கவசம், காப்பு, மோதிரம், பதக்கம், நெற்றிச்சுட்டி, முத்துமாலை, ஒட்டியாணம், பூமாலைகள் அணிவித்து சந்தனம், புனுகு, சவாது முதலிய வாசனை திர்வியங்கள் தெளித்து மணவரையில் அமர்த்தி பொற்கம்பியில் தாலியைக்கோத்து மணமகன் மணமகள் கழுத்தில் தரிப்பித்து இருவரையும் சிவனை வலம்வந்து வணங்கி சாண்றோர் வாழ்த்தினைப் பெருவர். ஆரியரின் வருகைக்கு பின் இவை எல்லாம் மாறிவிட்டன.

புதுக்கோட்டைமன்னர் தொண்டமான்.
புதுக்கோட்டைமன்னர் தொண்டமான் அவர்கள் கள்ளர் என்பதை அனைவரும் அறிவர். இவருடைய முன்னோர்கள் வேங்கடமலைப் பகுதியை ஆண்ட தொண்டைமான் கோட்டையிலிருந்து வந்தவர்கள் என்று இராஜ அனுராக மாலை கூறுகின்றது. பண்டை காலத்தில் விழுச்சீர் வேங்கட மலையும் சேர்ந்ததே தொண்டை மண்டலம் எனப்பட்டது. முற்காலத்தில் திருப்பதி மலையில் வணங்கப்பட்டவர் சிவபெருமானே என்பதை சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

திருப்பதி மலை உட்பட்ட தொண்டை மண்டலத்தை ஆண்டவர்கள் கள்ளர்களே. இதனை கள்ளில் ஆத்திரையனார், மாமூலனார், தாயங்கண்ணனார் போன்ற தகைசான்ற பெரும் புலவர் பெருமக்கள் பன்னிரண்டு அகநானூறு பாடல்களில் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் தொண்டை மண்டலத்தை ஆண்டதால் தொண்டைமான் என்ற பட்டம் பெற்றனர். தொண்டைமான், தொண்டையர், தொண்டைமான் கிளையார், தொண்டைப்பிரியர், தொண்டார், பல்லவர், பல்லவராயர், பல்லவாண்டார், பல்லவநாடார், பல்லவதரையர் என்ற பட்டமுடைய கள்ளர்கள் இவர்களின் வழித் தோன்றல்களே ஆவர்.

No comments:

Post a Comment