INTERNATIONAL KALLAR PERAVAI

சர்வதேச கள்ளர் பேரவை உங்களை பாசமுடன் வரவேற்கிறது

Picture
வேறுக்கு நீர்வார்க்கும் சொந்தங்களே வணக்கம்.
சர்வதேச கள்ளர் பேரவையின் இணையத்தளத்திற்கு ஆர்வமுடன் வருகை தந்திருக்கும் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

தொல்பெரும் குடியில் தோன்றி, நல்லற் நெறி நின்று நாடாண்டு, வளம் பெருக்கி, வள்ளல் பெருந்தகையாய் வாழ்ந்து வளமார் புகழ் பெற்று விளங்கிய கள்ளர் குலம் பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்சியடைகிறோம்.

இத்தளத்தில் நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் செய்திகள் நிறையவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு இடம் பெறாத, இடம் பெற வேண்டிய செய்திகளும் உங்களிடமும் இருக்குமேயானால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் ஸ்பென்சர்வெல் மனிதனின் பயனம் என்ற ஆய்வின் முடிவுகள் தரும் தகவலின் படி கள்ளரினத்தில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரலாற்று தொடாபு உண்டு என்றும், வேறு எந்த சமூகத்திற்கும் இவ்வித குடும்ப வரலாற்று தொடர்புகள் இல்லை என்றும், நாகரீக இனங்களில் 65000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் இனம் கள்ளர் இனமென்றும், இன்று உலகலவில் பல்வேறு நாட்டு மானிடவியல் அறிஞர்களும் ஆய்வு செய்யும் இனமும் கள்ளர் இனம் என்றும் கூறுகிறார்.

எந்த ஒரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாடுகளையும் அறிந்து உரையாடி உறவு கொண்டுள்ளதோ அது தான் ஜீவனுள்ள உயிருள்ள இனமாகும். இல்லை எனில் அடையாலமற்ற மாண்ட இனமாகிவிடும்.

கள்ளர் குல இளைஞர்களே கண்மூடித்தனமெல்லாம் மண்மூடிபோக விழித்தெழுங்கள். உங்கள் இனம் காக்க நீங்கள் முன்னேற்றமடைய இன்றைய கள்ளர் தான் அன்றைய மன்னர்கள் என்று உணருங்கள்.

உங்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சொந்தம் ?

உங்களுக்கும் இந்த மண்னின் பண்பாட்டிற்கும் என்ன உறவு ?

உங்களுக்கும் இந்த மாபெரும் சோழமண்டலத்திற்கும் என்ன சம்பந்தம் ?

விடை கண்டு உயர்வு அடையுங்கள்.
ஜெயராம் கண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
இங்கிலாந்து.



Thursday, November 25, 2010

உயர்திரு விருத்தாசலம் நாட்டார் ஐயா இறைவனடி சேர்ந்தார்













கள்ளர் குல மா மனிதர் பாசமிகு உயர்திரு விருத்தாசலம் நாட்டார் ஐயா இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி திரு பழனிவேல் சோழகர் மூலமாக 24/11/2010 அன்று சர்வதேச கள்ளர் பேரவைக்கு கிடைத்தது. சர்வதேச கள்ளர் பேரவையின் சிறப்பு அங்கத்தினராக இருந்து பல்வேறு வழிகளிலும் எமக்கு உதவிகளும், ஆலோனைகளும் வழங்கி வந்த ஒரு மாபெரும் மேதை இன்று நம்முடன் இல்லை என்று உணரும் போது இதயம் வலிக்கிறது. ஐயாவின் மறைவினால் துயரும் குடும்பத்தினருக்கு சர்வதேச கள்ளர் பேரவை உருப்பினர்கள் சார்பாக எமது இரங்களை தெரிவிதுக்கொள்கிறோம்.

வையத்து வாழ்வாங்கு வாழ்ந்த விருத்தாசலம் நாட்டார் ஐயா இன்று நம்மமுடன் இல்லை. பொன் மன உடல் பூமிதனில் சாய்ந்து விட்டது. பெரும்புலவனாய், புரவலனாய், பேராசிரியருமாய்த் திகழ்ந்த மாமனிதர் குவித்திட்ட சாதனைகள் அளவிடமுடியாதவை. நெஞ்சார நினைத்து அவரது திருவடிக்குத் தலைசாய்த்து வணங்குவோம்.

நாமெல்லோருமே வாழப்பிறந்தவர்கள், வாழத்துடிக்கிறோம், நம் இதயங்கள் நமக்காக துடிக்கின்றன. பல்லாயிரத்திலொருவர் இதயம் மட்டுமே பிறர் வாழத் துடிக்கிறது. அத்துடிபினை நாம் விருத்தாசலம் நாட்டார் ஐயாவிடம் கண்டோம்.நாம் இன்ப துன்பங்களையும்,ஏற்ற இறக்கங்களையும், கவலை குலப்பங்களையும் அனுபவித்து வாழ்ந்தாலும்,விருத்தாசலம் நாட்டார் ஐயா பிறர்க்கென வாழ்ந்த சான்றோன். தான் தோன்றிய குலத்திற்கும்,தமிழ் மொழிக்கும்,கல்வி முதலிய சமுதாய வளர்ச்சிக்கும் உறுதுணையாக நின்று இளமை முதல் முதுமை வரை எத்தனையோ தடைகள்,இடையூறுகள், அழிபாடுகளையும் தாண்டி இயலாமைக்கு கைகொடுத்து தாங்கி பலரையும் கரை சேர்த்த மாமனித பெருமகனார் இறைவன் திருவடிகளில் இளைப்பார ஈரமுடன் ஈசனை வேண்டுவோம்.

விருத்தாசலம் நாட்டார் ஐயா மறைந்து விட்டாலும் அவரது தொண்டும், ஆற்றிய பணிகளும், ஈட்டிய புகழும் பல்லாயிரம் ஆண்டுகள் ஒளிர்ந்து கொண்டேயிருக்கும். சான்றோர்கள் புகழ் பரப்பி சான்றோனாய் மறைந்துவிட்ட மாமனிதர் ஐயா விருத்தாசலநாட்டார் ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பார துதித்திடுவோம்.

என்றும் ஈரமுடன் நினைவில் கொள்ளும்
சர்வதேச கள்ளர் பேரவை
இங்கிலாந்து.